த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!
நடிகை த்ரிஷா வீட்டில் இருந்து விஜய் முதலில் வெளியே வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் இன்னும் இரு மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்கை எதிரி பாஜக:
இந்த தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர் நடிகரும், தவெக தலைவருமான விஜய். திமுக-வை அரசியல் எதிரி என்றும், பாஜக-வை கொள்கை எதிரி என்றும் விஜய் வசைபாடியிருக்கிறார்.
இந்தநிலையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
த்ரிஷா வீட்டில் விஜய்:
பாவம் அவரு அனுபவமே இல்லாதவரு. முதல்ல வீட்டை விட்டு வெளிய வரனும். த்ரிஷா வீட்டுல இருந்து வெளிய வரனும். வந்தாதான் முதல்ல எல்லாமே நடக்க முடியும். குடும்பத்தோடு நல்ல உறவு வைக்கனும்.
நல்ல தலைவர்கள் வழிநடத்துன இயக்கத்தை நல்ல முறையில் சொல்லனும். முதலில் இதில் இருந்து வெளியில் வரனும். வீட்டை விட்டு வெளிய வரனும். நான் சொல்றேன் களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவன், கூரை ஏறி கோழிப்பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? இதுதான் விஜய்க்கு பதில்.
ஆளே கிடையாது:
அனுபவத்தில் பார்க்க வேண்டும். 32 சதவீதம் வாக்கு இருக்கிறது என்று நடிகரால் சொல்ல முடியுமா? முதலில் வீட்டில் இருந்து வெளியில் வரனும். குடும்பஸ்தனா வந்து ஒரு கட்சி நடத்தனும். நான் அவரைப் பத்தி எல்லாம் பேசல. அவரு ஆளே கிடையாது எனக்கு.
கூட்டம் இருந்தால் என்ன? ஓட்டு வேண்டாமா? விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா? ஓட்டு வேண்டாமா? நானும் ஆஞ்சநேயர் மாதிரி மலையைத் தாண்டுவேன் என்று சொல்லலாம். நம்பிக்கைதான். முடியுமா? விஜய் ஒரு சீட்டுகூட ஜெயிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விஜய் கட்சி தொடங்கியது முதலே பாஜக-வை பாசிச கட்சி என்றும், தனது கொள்கை எதிரி என்றும் தெரிவித்து வருகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அதிமுக -பாஜக ஆகிய கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தற்போதைய சூழல் வரை விஜய்யுடன் எந்தவொரு கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்தும் அவருடன் கூட்டணி வைக்க எந்த கட்சியினரும் முன்வரவில்லை.
நயினாரை அட்டாக் செய்யும் தவெக தொண்டர்கள்:
வரும் தேர்தலில் விஜய் தனித்தே போட்டியிடும் சூழலே உண்டாகும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறது பாஜக. இந்த சூழலில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் த்ரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து பேசிய நயினார் நாகேந்திரனை தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.






















