TN Assembly Session LIVE: 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் : அமைச்சர் மெய்யநாதன் 

TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..

Continues below advertisement

LIVE

Background

கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 

 
Continues below advertisement
17:13 PM (IST)  •  25 Apr 2022

சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு, மறுவாழ்வு மையம்

சென்னையில்  கடல் ஆமைகள் பாதுகாப்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அறிவித்துள்ளார். 

17:11 PM (IST)  •  25 Apr 2022

கிராமங்கள் தோறும் 'மரகத பூஞ்சோலைகள்' அமைக்கப்படும் : அமைச்சர் ராமசந்திரன் அறிவிப்பு

கிராமங்கள் தோறும் 'மரகத பூஞ்சோலைகள்' அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அறிவித்துள்ளார். 

16:19 PM (IST)  •  25 Apr 2022

1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் : அமைச்சர் மெய்யநாதன் 

நடப்பாண்டு சுற்றுச்சூழல்துறை சார்பில் 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் என்றும், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, வேலூரில் விளையாட்டு மைதானங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார். 

15:53 PM (IST)  •  25 Apr 2022

சென்னையில் குத்துச்சண்டை அகாடமி : அமைச்சர் மெய்யநாதன்

சென்னையில் ரூ. 2 கோடி செலவில் குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார். 

15:48 PM (IST)  •  25 Apr 2022

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலை!

15:14 PM (IST)  •  25 Apr 2022

பெரும் மதிப்பிலான குடிமைப் பொருட்கள் பறிமுதல் : அமைச்சர்

குடிமைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

12:18 PM (IST)  •  25 Apr 2022

தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்க சட்ட மசோதா நிறைவேறியது

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசின் ஆணையின் மூலம் தேர்வு செய்யும் வகையில் மசோதா நிறைவேறியது.

12:13 PM (IST)  •  25 Apr 2022

ஆளுநர் மாளிகையை காலி செய்ய வேண்டும் - சிந்தனை செல்வன்

ஆளுநர் மாளிகையை காலி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அமைச்சர்கள் இருக்கக்கூடிய கிரீன்வேஸ் சாலையில் ஆளுநருக்கு குடியிருப்பில் கொடுக்க வேண்டும்! -  சட்டப்பேரவையில் வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் வலியுறுத்தல்!

12:06 PM (IST)  •  25 Apr 2022

அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக பேசினார் - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

துணை வேந்தர் மசோதாவின் மீது அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி பேச எழுந்த போது, அவரை ‘உட்காருடா’ என வார்தையை பயன்படுத்தி, மரியாதை குறைவாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு

11:52 AM (IST)  •  25 Apr 2022

ஊட்டியில் ஆளுநர் நடத்தும் மாநாடு - ஜவாஹிருல்லா எதிர்ப்பு

உயர்கல்வித் துறை அமைச்சர் பங்குகொள்ளாத நிலையில், ஊட்டியில் ஆளுநர் தன்னிச்சையாக துணை வேந்தர் மாநாட்டை நடத்தி வருவது அரசின் அதிகார பிரச்னைக்கும் நடைமுறை சிக்கலுக்கு வழிவகுக்கும் என்ற பூஞ்சிய ஆணையம் சொன்னதை நிரூபிக்கும் செயலாக இருக்கிறது - பேரவையில் ஜவாஹிருல்லா பேச்சு

11:19 AM (IST)  •  25 Apr 2022

துணைவேந்தர் நியமன மசோதா தாக்கல்

பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை தாக்கல் செய்தார்.

11:11 AM (IST)  •  25 Apr 2022

கோவை சாலைகளை கேரள மாநில சாலைகளுடன் இணைப்பு எப்போது..?

கோவை மாவட்ட சாலைகளை கேரள மாநில சாலைகளுடன் இணைக்கும் மேற்குபுறவழிச்சாலையை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

10:19 AM (IST)  •  25 Apr 2022

விரைவில் நாமக்கல் புறவழிச்சாலை - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

நாமக்கல் புறவழிச்சாலை விரைவில் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

10:12 AM (IST)  •  25 Apr 2022

துணைவேந்தர் நியமன மசோதா இன்று தாக்கலாகிறது

பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டமசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை தாக்கல் செய்கிறார்.