தமிழக வெற்றிக் கழக அரசு தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் கல்வி நிகழ்ச்சிகளில் கட்சிப் பாடல் ஒலிக்கப்பட்டது மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement

தவெக ஆட்சியும் குற்றச்சாட்டுகளும்

2026 சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ள ஒரு மாதத்தில் பல்வேறு விதமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது. இதனிடையே ஆட்சி பொறுப்பேற்ற நாளில் விஜய் கட்சியின் நிர்வாகிகளுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதால் ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். அப்படி நினைப்பவர்கள் இப்பவே வெளியேறலாம் என கூறினார். 

ஆனால் தவெக ஆட்சி என்ற நிலையில் ஆங்காங்கே அக்கட்சி நிர்வாகிகள் முகம் சுளிக்க வைக்கும் செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அதுதொடர்பாக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்சியின் நிர்வாகிகள் செயல்பாடு விஜய்க்கு தான் அவப்பெயரை ஏற்படுத்துகிறது என பொதுமக்களே கவலைப்படும் அளவுக்கு அவர்களின் செயல் அமைகிறது. 

Continues below advertisement

கல்வி நிகழ்ச்சிகளில் கட்சிப்பாடல்

இதனிடையே கோவையில் uள்ள அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்வில் அவர் பேசி முடித்த பிறகு தவெக கட்சி பாடல் ஒளிபரப்பப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றார். அப்போது அவர் சுற்றியிருந்த மாணவ, மாணவியர்களை செல்ஃபி வீடியோ எடுத்தார். அந்த சமயம் கீழே அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள் தவெக தவெக என கத்தியது சலசலப்பை ஏற்படுத்தியது.

Also Read: மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே செயல்படும் அரசு பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி இடும்பாவனத்தைச் சேர்ந்த அகிலன் என்பவர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பெரும் கண்டனங்களைப் பெற்றது. தவெக மாவட்ட துணைச் செயலாளரான அவர் நள்ளிரவில் பள்ளி வளாகத்தில் உள்ள இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஈடுபட்டார். 

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே செயல்படும் அரசு பள்ளியின் வகுப்பறையில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜயின் புகைப்படத்தை மாட்டி அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளியில் அட்மிஷன் தொடங்கி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினராக சேர்ப்பது வரை பரிந்துரை கடிதம் அளிப்பது என தவெகவினர் மற்றக் கட்சியினரை போல செயல்படுவது மக்களிடையே ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது.