TN Weather: நாளை வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை! புயலாக மாறுமா?
Tamil Nadu Weather Update: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்ககடல் paகுதிகளில் நாளை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது,

தென்கிழக்கு வங்ககடல் paகுதிகளில் நாளை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது தொடங்கி தற்போது தீவிரமடைந்து வருகிறது. இந்த் நிலையில் தெற்கு அந்தமான் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்ககடல் paகுதிகளில் நாளை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 25 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கான வானிலை:
22-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், துவை மற்றும் காலை காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது..
24-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது-முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிஞ இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
புயலாக மாறுமா?
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதும் இல்லை. ஒரு வேலை புயலாக மாறினால் அதன் பாதை மற்றும் கரையை கடக்கும் இடம் குறித்தான தகவல்கள் வரும் நாட்களில் தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.






















