தமிழ்நாட்டில் புதிதாக  8 புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார். 

Continues below advertisement

பட்ஜெட் கூட்டத்தொடர்:

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மானியக்கோரிக்கைகள் தற்போது சட்டப்பேரவையில் நடந்து வருகிறது. இதில் துறைவாரியான மானிய  கோரிக்கைகள் குறித்து விவாதம் நடந்து வருகிறது. 

இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைப்பெற்றது. 

Continues below advertisement

142 கோடி மதிப்பில்:

இந்த நிலையில் அமைச்சர் நேரு தமிழ்நாட்டில் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்கபடும் அறிவிக்கப்பட்டது. இதில் கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும். 

இதுமட்டுமில்லாமல்  பாலப்பள்ளம், நாட்டரசன்கோட்டை, புதுப்பாளையம்,ஆரணி, குன்னத்தூர், உடன்குடி, ஏர்வாடி, கும்மிடிப்பூண்டி, பரமத்தி, திருபுவனம், பருகூர் ஆகிய 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார். 

சென்னை மாநகராட்சிக்கான திட்டங்கள்: 

  • புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்  வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ், பேருந்து செல்லும் சாலைகளில் 200 கி.மீ நீளத்திற்கு ரூ.200 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
  •  ரூ.95 கோடி மதிப்பீட்டில் ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்களின் தடுப்புச் சுவரை உயர்த்தவும், குப்பைகள் கொட்ட முடியாத அளவுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை  
  • நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்  
  • ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்
  •  ரூ.60 கோடி மதிப்பீட்டில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்  ரூ.45 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்
  •  ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்  
  • ரூ.60 கோடி மதிப்பீட்டில் கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம் மற்றும் சைதாப்பேட்டை இறைச்சிக் கூடங்கள் மேம்படுத்தப்படும்  பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் நவீன வசதிகள் உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்