முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம் துணைவியாருடன் 2009இல் தங்கள் உடல்களை தானம் செய்வதற்குரிய கொடைப் பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தந்த நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை 23,189 பேர் தங்கள் உடல் தானத்திற்குப் பதிவு செய்துள்ளனர். 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை 253 பேர் தானமாக வழங்கியுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது துணைவியார் துர்க்கா ஸ்டாலினும், 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு 28 ஆம் நாள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு விழாவுக்காகச் சென்றிருந்தார்கள். அந்த விழா நிகழ்ச்சியின் இடையே இருவரும் தங்களுடைய வாழ்நாள் இறுதியில் உடல் தானம் வழங்குவதற்கான உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டார்கள். அந்த மகத்தான நிகழ்வு அப்போது மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் அவர்கள் இருவருக்கும் பெற்றுத் தந்தது.

அன்றைய நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உடல் உறுப்புகளைத் தானம் செய்வது இன்று நேற்றல்ல கடந்த கால வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. மன்னர்கள், நாயன்மார்கள் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர். கண்ணப்ப நாயனார் தனது இரண்டு கண்களையும் தானமாக வழங்கியதாகப் புராணம் கூறுகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக ஒருவர் உடலில் உள்ள உறுப்புகளை எடுத்து வேறு ஒருவருக்குப் பொருத்தி உயிர் வாழ வைக்கும் சம்பவங்கள் பெருகி வருகின்றன" என்று குறிப்பிட்டார்.

Continues below advertisement

"2008 செப்டம்பர் மாதம் திருக்கழுக்குன்றத்தைச் ஹிதேந்திரனுக்கு சாலை விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டது. அவரது இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெங்களூருவில் உள்ள ஒரு சிறுமிக்கு பொருத்தப்பட்டது. சென்னை மருத்துவர்களின் இந்த சாதனையை மறக்க முடியாது. அவரது பெற்றோரின் நற்செயலை நான் நேரில் அவர்களது வீட்டுக்குச் சென்று பாராட்டினேன். அவரது பெற்றோருக்குச் சுதந்திர தினவிழாவில் விருது வழங்கி அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் சிறப்பித்தார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடலுறுப்பு தானம் செய்பவர்களைப் பாராட்டும் வகையில், கடந்த 2023 செப்டம்பர் திங்கள் 23 ஆம் தேதி உடலுறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற மாவட்ட அளவிலான அலுவலர்கள் அரசு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபிறகு இதுவரை 253 பேர் உடலுறுப்பு தானம் செய்து, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இரண்டு ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு பேர் உடலுறுப்பு தானம் செய்திருப்பது என்பது இந்திய அளவில் தமிழ்நாடுதான் இன்றைக்கு முதலிடத்தில் இருக்கின்றது. முத்தமிழறிஞர் கலைஞர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததற்குப் பிறகு இந்திய அளவில் தமிழ்நாடு இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசின் பல விருதுகளை ஆண்டு தோறும் பெற்று வருகிறது.

தியாகச் சுவர்

அந்த வகையில் கடந்த ஆண்டும் கூட அதிக அளவில் உடலுறுப்பு தானம் செய்தவர்கள் என்கின்ற வகையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்தது. இந்த திட்டம் அறிவித்தபிறகு இதுவரை உடலுறுப்பு தானம் பதிவு செய்திருப்பவர்கள் 23,189 பேர். இப்படி இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் இந்த சிறப்புக்குரிய திட்டத்திற்கு மேலும் நிறைவேற்றுகின்ற வகையில் தியாகச் சுவர் (wall of honour) நிறுவப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இதுபோல் நிறுவப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.