Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டு மக்களே அலர்ட்.. நாளை(02-06-26) எங்கெல்லாம் பவர் கட்! முழு லிஸ்ட் இங்கே
Tamil Nadu Power Shutdown (02-06-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது

amil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 02 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை கோவை, உடுமலைப்பேட்டை, சென்னை ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
சென்னை
அண்ணாசாலை : டி. எண் 1 முதல் 154 வரை, 784 முதல் 829 வரை, பூதபெருமாள் தெரு, பெருமாள் தெரு, இபி லிங்க் தெரு, எல்லிஸ் ரோடு, ஜி.பி.ரோடு, பூபேகம் தெரு, எல்.என்.ஜி. சாலை, மோகன்தாஸ் சாலை, பார்டா தோட்டம், பேகம் சாகிப் தெரு, சாமி ஆச்சாரி தெரு, சுபேதரல் 1வது தெரு, சையது அப்துல் தெரு, பங்காரு நாய்கன் தெரு, குப்பமுத்து தெரு, வாலர்ஸ் சாலை, டேம்ஸ் சாலை, கரிம் மொய்தின் தெரு, தலைமை தபால் நிலையம், பிஎஸ்என்எல், பிளாகர்ஸ் சாலை, டெலிபோன் நிலையம், ஸ்டேட் பேங்க் தெரு, ஆறுமுகம் தெரு, வெல்டர்ஸ் தெரு, பஜ்ரங்கன் பகதூர் தெரு, ஆதித்தனார் சாலை, சந்திர பானு தெரு, சி.பி.எம். தெரு, சாமி செட்டி தெரு, புதுபேட்டை காவலர் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
கோவை
எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மன்னிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம்.
உடுமலைப்பேட்டை
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், எஸ்.எல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பேரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலாம்பாள்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Before You Go
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
ட்ரெண்டிங் செய்திகள்























