சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
நாட்டிலே கடந்தாண்டு நெடுஞ்சாலைகளில் அதிகளவு விபத்துகள் நிகழ்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்த விபத்துகளினால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகள் பற்றிய தரவுகளை வெளியிட்டுள்ளுது. இந்த தரவுகள் தமிழ்நாட்டிற்கு வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது.
அதிக விபத்துக்களில் தமிழ்நாடு டாப்:
ஏனென்றால், கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் அதிகளவு விபத்துகள் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2025ம் ஆண்டு மட்டும் 21 ஆயிரத்து 122 விபத்துகள் நெடுஞ்சாலைகளில் அரங்கேறியுள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் 6 ஆயிரத்து 156 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2025ம் ஆண்டு நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்களை எதிர்கொண்ட முதல் 5 மாநிலங்களின் பட்டியல் கீழே வருமாறு:
1. தமிழ்நாடு - 21 ஆயிரத்து 122 விபத்துக்கள்
2. கர்நாடகம் - 13 ஆயிரத்து 537 விபத்துக்கள்
3. உத்தரபிரதேசம் - 10 ஆயிரத்து 842 விபத்துக்கள்
4. கேரளா - 9 ஆயிரத்து 195 விபத்துக்கள்
5. மகாராஷ்ட்ரா - 9 ஆயிரத்து 592 விபத்துக்கள்
இந்த பட்டியலில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் 3 உள்ளது.
அதிக உயிரிழப்புகள் எங்கே?
அதேபோல, கடந்த 2025ம் ஆண்டு நெடுஞ்சாலைகளில் நடந்த சாலை விபத்துக்களில் அதிகளவு உயிரிழந்தவர்கள் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.
1. உத்தரபிரதேசம் - 6 ஆயிரத்து 973 உயிரிழப்புகள்
2. தமிழ்நாடு - 6 ஆயிரத்து 156 உயிரிழப்புகள்
3. மகாராஷ்ட்ரா - 5 ஆயிரத்து 718 உயிரிழப்புகள்
4. கர்நாடகம் - 3 ஆயிரத்து 993 உயிரிழப்புகள
5. பீகார் - 3 ஆயிரத்து 837 உயிரிழப்புகள்
இந்த பட்டியலில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு மட்டும் கடந்தாண்டு நெடுஞ்சாலை விபத்துக்களில் 6 ஆயிரத்து 973 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தென்னிந்திய மாநிலங்கள் இரண்டு உள்ளன.
காரணங்கள் என்ன?
வாகன ஓட்டிகளின் கவனக்குறைவே பெரும்பாலான விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது. தூக்கத்துடன் வாகனம் ஓட்டுதல், வளைவுகளில் முந்துதல், சாலை விதிகளை பின்பற்றாததே பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால், இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் நெடுஞ்சாலைகள் தரமானதாகவே அமைந்துள்ளது. இதனால், சாலையின் தரம் விபத்திற்கு காரணமாக குறைந்த அளவே உள்ளது.
மேலும், பலரும் தங்களது வாகனங்களை முறையாக பராமரிக்காததால் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது வாகனங்கள் பழுதாகி கட்டுப்பாட்டை இழப்பதாலும் விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், அதிவேகத்தில் செல்வதும் விபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் இரு சக்கர வாகனங்களை இயக்கிய சிலரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான விபத்துக்கள் இரவு நேரங்களிலே நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.























