Breaking News Tamil LIVE: ஜனவரி -3 முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பெட்டகம் விநியோகம்

அதிமுக ஆர்ப்பாட்டம்

மா.வீ.விக்ரமவர்மன் Last Updated: 17 Dec 2021 09:25 PM
ஜனவரி -3 முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பெட்டகம் விநியோகம்

ஜனவரி -3 முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பெட்டகம் விநியோகம்

உயிரிழந்த மாணவர்கள் - இழப்பீடு வழங்கிய முதலமைச்சர்

திருநெல்வேலியில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு10 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த மாணவர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்தியாவில் 100-ஐ தாண்டிய ஒமிக்ரான் பாதிப்பு

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

நாங்க என்ன வலிமை இல்லாத சிமெண்ட்டா கொடுத்தோம்? - இபிஎஸ்


நெல்லை: தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழப்பு - தமிழிசை இரங்கல்

நெல்லை - 3 பேர் பலி


திருநெல்வேலி டவுனில் தனியார் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்வு 

ஒரே நாடு ஒரே தேர்தல்

2 ஆண்டுகள்தான் ஆட்சி இருக்கும் எனவும் ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறது எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் அதிமுகவின் கோட்டை - இபிஎஸ்


டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இதுவரை டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு 20ஆக அதிகரித்துள்ளது.  

பள்ளியை சேதப்படுத்தும் மாணவர்கள்

உடன் படித்த பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததையடுத்து கோபத்தில் பள்ளியின் பொருட்களை அடித்து சேதப்படுத்தி வருகின்றனர் மாணவர்கள். 

நெல்லை: தனியார் பள்ளி சுவர் இடிந்து 2 மாணவர் பலி

திருநெல்வேலி டவு சாஃப்ட்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 



தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

சி.வி.சண்முகம் சவால்

“மாரிதாஸை கைது செய்த காவல்துறையால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்துவிடமுடியுமா..? அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்தவர் ; அவர் மீது முடிந்தால் கை வைத்து பாருங்கள்” என்று சிவி சண்முகம் சவால் விடுத்துள்ளார். 

வெங்கடாச்சலம் தற்கொலை

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை செய்துகொண்டதில் வட மாவட்டத்தை சேர்ந்த திமுக அமைச்சரின் தூண்டுதல் இருக்கிறது விழுப்புரத்தில் நடைபெற்றும் வரும் போராட்டத்தில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு

பல்வேறு இடங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் விழுப்புரம், மதுரை, சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Background

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.