தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிர்த்துள்ளது. 
 
27.03.2023 மற்றும் 28.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


29.03.2023 முதல் 31.03.2023 வரை:  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான /  மிதமான மழை   பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  
மன்னார்குடி (திருவாரூர்) 8, அழகரை எஸ்டேட் (நீலகிரி) 7, கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), குன்னூர் PTO (நீலகிரி) தலா 5, பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கோத்தகிரி (நீலகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) தலா 4, பல்லடம் (திருப்பூர்), பாலக்கோடு (தர்மபுரி), அமராவதி அணை (திருப்பூர்), பாப்பாரப்பட்டி_KVK (தர்மபுரி) தலா 3, சூரலக்கோடு (கன்னியாகுமரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சிவலோகம் (சித்தர் II) (கன்னியாகுமரி), ஒகேனக்கல் (தர்மபுரி), பென்னாகரம் (தர்மபுரி), ஏற்காடு (சேலம்), மேல் பவானி (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 2, சூலூர் (கோயம்புத்தூர்), குமாரபாளையம் (நாமக்கல்), கொடைக்கானல் (திண்டுக்கல்), குன்னூர் (நீலகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), சோலையார் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), குடியாத்தம் (வேலூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் மழை பெய்து வந்தது. இதனால் சென்னையில் குளிர்ந்த வானிலையே நிலவி வந்தது. ஆனால் சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவித்த போதிலும் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இன்னும் கோடைக்காலம் தொடங்காத நிலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கும் நிலையில், இதுவரை இல்லாத அளவு வெயில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.