நாட்டை குடும்பமாக பார்க்க வேண்டும்; பகுதி வாரியாகவும் மொழி வாரியாகவும் மத வாரியாகவும் பிரித்து பார்க்க கூடாது என்று தமிழ்நாடு  ஆளுநர் என்.ஆர். ரவி தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில்  ஜன ஆரோக்கிய மேளா சார்பில் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் ஆர்.என். ரவி  பேசியதாவது, 


"நம் நாட்டை குடும்பமாக பார்க்கவேண்டும். பகுதி வாரியாகவும், மொழி வாரியாகவும், மத வாரியாகவும் பிரித்து பார்க்க கூடாது. சுகாதாரப் பிரச்சனை என்பது நாட்டின் பிரச்சனை. நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட்டு  சிக்கலை தீர்க்க வேண்டும் என்பதே ஜனநாயக கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிலவும் தூய்மையின்மை பணக்காரர்களை விட ஏழைகளை அதிகமாக பாதிக்கிறது.


சுகாதார விழிப்புணர்வு:


ஒவ்வொரு வீட்டிலும்  தூய்மையான கழிவறை, குடிநீர் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் அவசியமானது. மேலும், விறகுகளை எரித்து சமைப்பதன் மூலம் வெளிபடும் புகை  உடல் நலக் குறைபாடை ஏற்படுத்தும். சுகாதார விழிப்புணர்வு என்பது  ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.  தற்பொழுது நம் நாட்டில் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியையாவது செயல்படும் வகையில்  நம் நாடு முன்னேறி வருகிறது எனவும் அவர் பெருமையுடன் பேசினார். 


தமிழ்நாட்டில் 55- க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  மேலும் கடந்த ஆண்டு 13 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.   நமது ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரோக்கிய மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.




மேலும் வாசிக்க..


Womens Day 2023 Wishes: 'மகளிரை போற்றும் நாள்..' உங்கள் வாழ்வை அழகாக்கும் பெண்களை வாழ்த்துங்கள்!


International Women's Day : சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? வரலாறு என்ன? இந்த ஆண்டின் தீம் இதுதான்!