TN Govt Paddy: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.2,500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு:

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 1 முதல் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஒரு குவிண்டால் நெல் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதேநேரம், சன்ன ரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 545 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திய தமிழக அரசின் முடிவு விவசாயிகள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.