Free Electricity : யாருக்கெல்லாம் 200 யூனிட் இலவசம்.! தேர்தல் வாக்குறுதியில் திடீர் ட்விஸ்ட் கொடுத்த விஜய்
Free Electricity : 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா என்ற கேள்வி எழுந்த நிலையில், 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் எனவும், 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டள்ளது.

முதலமைச்சர் விஜய் வாக்குறுதிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து இன்று தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், 3 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன் படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அடுத்தாக நம்பிக்கையை பெண்களிடையே ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும், போதுமான ஆளிநர்கள் / பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
போதை பொருட்கள் தடுக்க நடவடிக்கை
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) அமைக்கப்படும் என முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து 3 வாக்குறுதிகளை அளித்தார்.
ஆனால் தவெகவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய விஜய், நம்ம ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடம், தமிழ்நாட்டு எல்லா குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்க தான் அரசியலுக்கு வந்தோம். எனவே அந்த எண்ணத்தை வெளிப்பாடு தான் ஒவ்வொரு குடும்பத்திற்குமான உத்தரவாதம் 200 யூனிட் கட்டண இல்லாத இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறியிருந்தார்.
பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த விஜய்
ஆனால் தற்போது இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்திருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என தெரிவித்து விட்டு தற்போது 500 யூனிட்டிற்குள் என்ற நிபந்தனை விதிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிதுள்ளனர்.
மேலும் 100 யூனிட் மின்சாரம் நிறுத்தமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் எனவும், 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















