இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைக்குழுவின்மூலம்மீனவர்பிரச்சினையைத்தீர்ப்பதற்கும்இலங்கைக்கடற்படையினரால்கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும்‌, அவர்களது மீன்பிடிப்படகுகளையும்விடுவித்திடவும்விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்டாக்டர்எஸ்‌. ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்ஸ்டாலின்கடிதம்எழுதியுள்ளார்.


இதுதொடர்பாகத் தமிழக அரசு தெரிவித்து உள்ளதாவது:


தமிழ்நாட்டைச்சேர்ந்த 6 மீனவர்கள்இலங்கைக்கடற்படையினரால்‌ 22-1-2024 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில்‌, அவர்களையும்‌, அவர்களது மீன்பிடிப்படகுகளையும்விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர்மு.. ஸ்டாலின்‌‌, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்டாக்டர்எஸ்‌. ஜெய்சங்கருக்கு இன்று (24-1-2024) கடிதம்எழுதியுள்ளார்‌.


அக்கடிதத்தில்‌, இராமநாதபுரம்மாவட்டத்தைச்சேர்ந்த ஆறு மீனவர்கள்‌ IND – TN – MM – 769, IND – TN – MM – 750 என்ற பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப்படகுகளுடன்மீன்பிடிக்கச்சென்றிருந்த நிலையில்‌, 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால்கைது செய்யப்பட்டுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்‌.


கைது செய்யப்படுவது கவலையளிக்கிறது


சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள்தொடர்ந்து இதுபோன்று இலங்கைக்கடற்படையினரால்கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும்‌, இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும்என்பதால்‌, இதில்ஒன்றிய அரசு உடனடி கவனம்செலுத்த வேண்டிய அவசியம்ஏற்பட்டுள்ளதாகவும்முதலமைச்சர்தனது கடிதத்தில்குறிப்பிட்டுள்ளார்‌.


அச்சத்தில் தமிழக மீனவர்கள்


இத்தகைய தொடர்கைது நடவடிக்கைகள்‌, தமிழ்ச்சமூகத்தின்பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப்பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும்‌, நிச்சயமற்ற சூழலையும்உருவாக்கியுள்ளதாகவும்‌, தமிழ்நாட்டைச்சேர்ந்த மீனவச்சமூகங்களின்கலாச்சார மற்றும்பொருளாதாரக்கட்டமைப்பை அச்சுறுத்தும்வகையில்உள்ளதாகவும்முதலமைச்சர்‌‌ மேலும்குறிப்பிட்டுள்ளார்‌.


இந்தப்பிரச்சினைக்குத்தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப்பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்என்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர்‌‌, மீனவர்கள்தொடர்பான பிரச்சினைகளுக்குத்தீர்வு காண


இந்தியா -இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக்குழுவினை அமைப்பதன்மூலம்இது சாத்தியமாகும்என்றும்தெரிவித்துள்ளார்‌.


அப்பாவி மீனவர்கள்தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத்தவிர்க்கவும்‌, இந்திய மீனவர்களுக்கும்‌, இலங்கைக்கடற்படையினருக்கும்இடையே நீண்ட காலமாக நிலுவையில்உள்ள பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கு ஏதுவாகவும்‌, உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக்குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரைக்கேட்டுக்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர்‌‌, இலங்கைக்காவலில்உள்ள தமிழ்நாடு மீனவர்களையும்‌, அவர்களது படகுகளையும்விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்தனது கடிதத்தில்வலியுறுத்தியுள்ளார்‌.