தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டவர் சங்கர் ஜிவால். இவர் தற்போது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திங்கள் முதல் வெள்ளி வரை, அரசு விடுமுறை தினங்கள் இல்லாமல், மற்ற அனைத்து வார நாட்களிலும் காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்கள் அறையில், தினமும் காலை 11.30 மணிக்கு பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் குறைதீர் மனுக்களை டிஜிபி சங்கர் ஜிவாலிடம் நேரடியாக கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.