மார்ச் மாதத்திற்கு பிறகு மகாராஷ்ட்ராவில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 31 May 2021 06:52 AM
மார்ச் மாதத்திற்கு பிறகு மகாராஷ்ட்ராவில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

மகாராஷ்ட்ராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 600 ஆக பதிவாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதிக்கு பின்னர் இதுவே அந்த மாநிலத்தில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆகும். அந்த மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 லட்சத்து 31 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 402 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 844 ஆக உயர்ந்துள்ளது.

தெலுங்கானாவில் ஊரடங்கு 10 நாட்கள் நீட்டிப்பு - முதல்வர் சந்திரசேகர்ராவ்

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி, ஹரியானா ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பொதுமுடக்கம் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் இன்றுடன் பொதுமுடக்கம் நிறைவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானாவில்

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி, ஹரியானா ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பொதுமுடக்கம் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் இன்றுடன் பொதுமுடக்கம் நிறைவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானாவில்
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி, ஹரியானா ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பொதுமுடக்கம் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் இன்றுடன் பொதுமுடக்கம் நிறைவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 28 ஆயிரத்து 864 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 689 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை புதிய உச்சமாக 493 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் 23 ஆயிரத்து 754 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானாவில் ஊரடங்கு ஜூன் 7-ந் தேதி வரை நீட்டிப்பு

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், டெல்லி, மகாராஷட்ரா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில், ஹரியானா மாநிலத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் வரும் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் வரும் 15-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு தொடரும் என்றும், கடைகள மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.  

ஹரியானாவில்

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், டெல்லி, மகாராஷட்ரா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில், ஹரியானா மாநிலத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் வரும் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் வரும் 15-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு தொடரும் என்றும், கடைகள மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.  

தடுப்பூசி முகாம்களில் அரசியல் தலையீடு இருக்க கூடாது - முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய அம்சமாக மாவட்டந்தோறும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முன்னுரிமைப் பெற்றவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, காவல்துறையினரின் உதவியுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற முகாம்களில் அரசியல் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்த ஆறுதல் கூறிய முதல்வர்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட வாரியாக ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கொங்கு மண்டலங்களான கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கொரோனா பாதுகாப்பு கவசமான பி.பி.இ. கிட் உடை அணிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஜூன் மாதத்தில் 11,95,70,000 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் - மத்திய அரசு

ஜூன் மாதத்தில் இந்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு 6.09 கோடி கொரோனா தடுப்பூசியின் டோஸ்கள் (கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின்), வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. 


கூடுதலாக, தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்துக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் ஜூன் மாத இறுதி வரை 5. 86 கோடி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நேரடிக் கொள்முதலுக்கு வழங்கப்படும். 


எனவே, மொத்தம் ஜூன் மாதத்தில் 11,95,70,000 கோடி தடுப்பூசிகள் தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.     

நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றுகிறார்

மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கிறார். கொரோனா பாதிப்புக்கு  மத்தியிலும்  நாட்டின்  வேளாண்துறை மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் கூறினார்.
  

பிராணவாயுவின் அளவு குறைந்திருப்பதற்கான அறிகுறிகள் - மருத்துவர்கள் விளக்கம்

சுவாசிப்பதில் சிரமம், குழப்பம், எழுந்திருப்பதில் பிரச்சினை, முகம் அல்லது உதடுகள் நீலமடைவது போன்றவை பிராணவாயுவின் அளவு குறைந்திருப்பதற்கான அறிகுறிகள் என பெங்களூரு தேசிய காசநோய் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்  ரவிச்சந்திரா தெரிவித்தார். வயதானவர்களுக்கு நீங்காத  நெஞ்சு வலியும், குழந்தைகளுக்கு நாசித்துவாரம் விரிவடைதல், சுவாசிக்கும்போது ஒலி ஏற்படுவது, பருகவோ, உண்ணவோ இயலாத நிலை போன்றவை ஏற்படும் என்றும் தெரிவித்தார் 


 

கொரோனா தடுப்பூசி: உயர்தர விடுதிகளுடன் இணைந்து சலுகைகள் அறிவிக்கக் கூடாது.

சில தனியார் மருத்துவமனைகள் சில உயர்தர விடுதிகளுடன் இணைந்து கோவிட் 19 தடுப்பூசிக்காக சில சலுகை தொகுப்புகளை அறிவித்துள்ளன. இது, தேசிய தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது  என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது.  

8ல் ஒரு இந்தியருக்கு (12.21%) தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

கோவின் தளத்தில் பதிவு செய்துகொண்ட 24.4 கோடி பேரில், 16.7 கோடிக்கும் அதிகமானோருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, பதிவு செய்து கொண்ட 6.5ல் ஒரு இந்தியருக்கு தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டுள்ளது.     


மேலும், 137 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில், 8ல் ஒரு இந்தியருக்கு (12.21%) தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. 


 

20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சரிவு

தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்புகள் சரிந்துள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவாரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகளை விட புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
.            

திருச்சி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் பணிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.     


இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில்," கொரோனா பெருந்தொற்று நோய் மேலாண்மையின் கீழ், திருச்சி மாநகராட்சியில் உள்ள தடுப்பூசி மையங்களில் உள்ள அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

Background

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர்/தத்து பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தையும் 18 வயது பூர்த்தி செய்தவுடன் மாதந்தோறும் உதவித்தொகையும், 23-வயதை எட்டும் போது 10 லட்சம் ரூபாயும், பஎம் கேர்ஸ் நிதியில் இருந்து  வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும், இலவச சுகாதார காப்பீட்டுத்திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்தது. 


63-வது பிறந்தநாளில் ஹீரோ! கமர்ஷியல் சினிமாவின் ‛காக்டெயில்’ கே.எஸ்.ரவிக்குமார்! 


முன்னதாக, கொரோனா காரணமாக உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.  அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் குழந்தைகள் தங்குவதற்கு முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு இடம் வழங்கப்படும்.  பட்டப்படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்கும்.  அரசு விடுதிகளில் தங்காமல் உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் 3,000 ரூபாய் உதவித்தொகை 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.   

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.