TN Corona LIVE Updates : தமிழ்நாட்டிலும் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் - ரவிக்குமார் எம்.பி
TN Corona Cases LIVE Updates: மருத்துவ அவசர நிலைக்காலம் என்பதால் 50% படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வரும் தனியார் மருத்துவமனைகள் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்
ABP NADU Last Updated: 06 May 2021 01:16 PM
Background
Corona Virus Latest News in Tamil: கோவிட்-19-க்கு எதிரான போரில் முக்கிய முன்னேற்றமாக, பிஎம் கேர்ஸ் நிதியுதவியுடன் இரண்டு அதிக சக்தி வாய்ந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் புதுதில்லி எய்ம்ஸ் மற்றும் ஆர்எம்எல் மருத்துவமனையில் ஒரே வாரத்தில் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய...More
Corona Virus Latest News in Tamil: கோவிட்-19-க்கு எதிரான போரில் முக்கிய முன்னேற்றமாக, பிஎம் கேர்ஸ் நிதியுதவியுடன் இரண்டு அதிக சக்தி வாய்ந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் புதுதில்லி எய்ம்ஸ் மற்றும் ஆர்எம்எல் மருத்துவமனையில் ஒரே வாரத்தில் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. கோவிட்-19 சிகிச்சை மருத்துவமனைகளில் தீ விபத்து சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு, மத்திய உள்துறை செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், " கோடைக்காலத்தில் அதிக வெப்பம், பராமரிப்பு குறைவு, மின்னழுத்தம், இவற்றின் ஏதோ ஒன்றின் காரணமாக சமீபத்தில் தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும், தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரத்துறை, மின்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, விரிவான செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தமிழ்நாட்டிலும் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் - ரவிக்குமார் எம்.பி
கேரளாவில் மே 8 முதல் முழு ஊரடங்கு அறிவித்துவிட்டார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். தமிழ்நாட்டிலும் அதுபோல் அறிவிக்கவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் நோயின் பரவலை அதிகமாக்கும் என விழுப்புரம் மக்களவை உறுப்பனர் ரவிக்குமார் எம்.பி தெரிவித்தார்.