மேலும் அறிய

CM Vijay: முதலமைச்சரான பிறகு விஜய் முதல் கடிதம்! யாருக்கு? எதற்காக எழுதியுள்ளார்?

CM Vijay First Letter: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் தனது முதல் கடிதத்தை தமிழக மீனவர்களுக்காக மத்திய அரசுக்கு எழுதியுள்ளார்.

CM Vijay First Letter: தமிழ்நாட்டில் எந்த அரசு பொறுப்பேற்றாலும் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தடுக்கப்படாமல் இருப்பது ஆகும். மத்திய அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ஒவ்வொரு முறை ஆட்சியில் இருந்த அரசும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளனர்.

முதலமைச்சராக முதல் கடிதம்:

இந்த சூழலில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற விஜய் இன்று தனது முதல் கடிதத்தை எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார். 

என்ன எழுதியுள்ளார்?

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் கடந்த 10ம் தேதி நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். 

அவர்கள் சர்வதேச எல்லையை கடந்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும், 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். 

எனவே, இப்பிரச்சினை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிரந்தர தீர்வு கிடைக்குமா?

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும், கைது நடவடிக்கைக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே இந்த விவகாரத்தில் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிரந்தர தீர்வு காண்பதில்லை. 

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள், வலைகள் என அவர்களின் உடைமைகள் இலங்கையில் இருந்து மீட்கப்பட முடியாமலே இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தவெக ஆட்சியில்  தங்களது பிரச்சினைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு கிடைக்குமா? என்று ஆவலுடன் மீனவர்கள் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எச்சரிக்கை..!
எச்சரிக்கை..! "விதிமீறலில் ஈடுபட்டால் உரிமம் ரத்து" உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புது டிஜிபி பொறுப்பேற்பு; யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புது டிஜிபி பொறுப்பேற்பு; யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?
மராட்டியத்தில் சாத்தியமானது தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? - அன்புமணி இராமதாஸ் கேள்வி !
மராட்டியத்தில் சாத்தியமானது தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? - அன்புமணி இராமதாஸ் கேள்வி !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget