தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வருகிறது. இதில் மாணவ, மாணவியர்களின் உயர்கல்வியை நிர்ணயிக்க செய்வதில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மிக முக்கிய பங்குகளை வகிக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற்றது. 


+2 தேர்வு முடிவுகள்


12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை  தமிழ்நாட்டில்  சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதினர். புதுச்சேரியில்  14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர்.  இதற்காக  3 ஆயிரத்து 225 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில், அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 10 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள்  அனுப்பி வைக்கப்பட்டது. 


இதனை அடுத்து, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 


மாவட்ட வாரியான விவரம்


12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக பெறப்பட்ட தேர்ச்சி விகிதம் பற்றி காணலாம். 


விருதுநகர் முதலிடம்


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை பொறுத்தவரை ஆண்கள் - 10,465, பெண்கள் - 11,843 என மொத்தம் 22,308 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 21,828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி விகதமானது 97.85 சதவீதமாக உள்ளது. அதன்படி, ஆண்கள் - 96.85 சதவீதமும், பெண்கள் - 98.73 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை இம்மாவட்டம் பிடித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.


பிற மாவட்டங்கள்



  • திருநெல்வேலி - 96.61%

  • தென்காசி - 95.96%

  • ராமநாதபுரம் - 96.30%

  • தேனி - 93.17%

  • மதுரை - 95.84%

  • திண்டுக்கல் - 93.77%

  • ஊட்டி - 93.85%

  • சேலம் - 94.22%

  • கிருஷ்ணகிரி - 89.69%

  • தர்மபுரி - 92.72%

  • புதுக்கோட்டை - 92.81%

  • கரூர் - 94.31%

  • திருச்சி - 96.02%

  • நாகப்பட்டினம் - 90.68%

  • மயிலாடுதுறை - 90.15%

  • திருவாரூர் - 91.46%

  • தஞ்சாவூர் - 95.18%

  • விழுப்புரம் - 90.66%

  • கள்ளக்குறிச்சி - 91.06%

  • கடலூர் - 92.04 %

  • திருவண்ணாமலை - 89.80%

  • வேலூர் - 89.20%

  • திருப்பத்தூர் - 91.13%

  • காஞ்சிபுரம் - 90.82%

  • செங்கல்பட்டு -  92.52%

  • திருவள்ளூர் - 92.47%

  • சென்னை - 94.14%


கடந்து ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்து இருந்தது. அதேபோன்று விருதுநகர் 2ஆம் இடத்தையும், ராமநாதபுரம் 3ஆம் இடத்தையும், கடைசி இடமாக வேலூர் மாவட்டம் பிடித்து இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு 97.85 சதவீதம் பெற்று முதல் இடத்தை விருதுநகர் மாவட்டம் பிடித்துள்ளது. அதேபோன்று, 97.79 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டமும், 97.59 சதவீதம் பெற்று பெரம்பலூர் மாவட்டமும் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. கடைசி இடமாக ராணிப்பேட்டை மாவட்டம் 87.30 சதவீதம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Nandhini Interview: 'படிப்புதான் உன் சொத்தும்பார்; அப்பா இல்லன்னா நான் இங்க இல்ல'- மாணவி நந்தினி நெகிழ்ச்சி பேட்டி