மேலும் அறிய

" ஆம்பளன்னா அப்படித் தான் இருப்பாங்க " - மாமியார் பேச்சால் மனமுடைந்த இளம் பெண் எடுத்த முடிவு

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட திருமணமான பெண்ணுடனான தொடர்பால் மன உளைச்சலுக்கு ஆளான காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை

சமூக வலைத் தளங்களில் பெண்களுடன் தொடர்பு

தாம்பரம் பழைய பெருங்களத்தூர் எத்திராஜ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கார்த்திக்ராஜா ( வயது 30 ) பி.காம் பட்டதாரியான இவர் பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) 26 வயதான பெண் பட்டதாரி ஆவார். இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் கீர்த்தனா , 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். குடும்ப எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு தனியாக வீடு எடுத்து வசித்து வந்த இத்தம்பதியரின் குடும்ப வாழ்க்கை ஆரம்பத்தில் சுமூகமாக சென்றதாக கூறப்படுகிறது.

கஞ்சா பழக்கம் - பெண்களுடன் நெருங்கிய தொடர்பு - சிக்கிய மொபைல் போன்

கார்த்திக் ராஜா கஞ்சா பழக்கத்திலும் , இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிலும் அதிகமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சமூக வலை தளங்களில் பெண்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். அவரது செல்போனை குழந்தைக்கு விளையாட கொடுத்த போது, அதை பார்த்த மனைவிக்கு பல பெண்களுடன் வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் உரையாடி வந்தது தெரிய வந்துள்ளது. அதில் திருமணமான பெண் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

" ஆம்பளனா அப்படி தான் இருப்பாங்க "

இது குறித்து கார்த்தி மனைவி தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், "ஆம்பளனா அப்படி தான் இருப்பாங்க கண்டுகொள்ளாமல் போ , இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் " என அவர்கள் அலட்சியமாக பேசி தவிர்த்துள்ளனர். மேலும், இதைக் குறித்து மகன் கார்த்திக்கிடம் " ஏண்டா நீ செல்போனை லாக் போட்டு வைக்க மாட்டியா " என செல்வி காது பட பேசியதையும் கேட்டு மனமுடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பெரிதும் மனம் உடைந்த செல்வி கணவனிடம் உரிமையுடன் நான் காதலித்து தானே கல்யாணம் செய்தேன் என மனம் உருகி நியாயம் கேட்டுள்ளார். அதற்கு " நீ வேண்டாம் அவள் தான் வேணும் " என்று கண்ட பெண்ணுக்காக கட்டிய மனைவி கண்ணத்தில் அடித்துள்ளார். இதனால் மன உளைச்சளுக்கு ஆளான கீர்த்தனா குழந்தையை ஹாலில் விட்டு கோபமாக அறைக்கு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் குடும்பத்தினர் பதறி போய் உள்ளனர். பின்னர் கார்த்திக் ராஜா கீர்த்தனா பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். கீர்த்தனா அம்மா மற்றும் உறவினர்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது புடவையால் செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து கீர்த்தனா தாய் தேவி , பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் கீர்த்தனா உடலை கைப்பற்றி, தற்கொலை குறித்த கடிதங்களையும் மீட்டுள்ளனர். உடல் உடற்கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கார்த்திக் ராஜாவை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் பெண் உயிரிழந்துள்ளதால் தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
நாய் மாதிரி காத்து கிடந்தாங்க.. அதிமுக முன்னாள் அமைச்சர்களை சாடிய தா.மோ.அன்பரசன்!
நாய் மாதிரி காத்து கிடந்தாங்க.. அதிமுக முன்னாள் அமைச்சர்களை சாடிய தா.மோ.அன்பரசன்!
புதுச்சேரியில் பயங்கரம்: செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி... ஒரே நாளில் 10 பேரிடம் ரூ.3 லட்சம் சுருட்டல்...!
புதுச்சேரியில் பயங்கரம்: செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி... ஒரே நாளில் 10 பேரிடம் ரூ.3 லட்சம் சுருட்டல்...!
JIPMER Recruitment 2026: ஜிப்மர் மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதச் சம்பளம் ரூ.67,000 வரை!
JIPMER Recruitment 2026: ஜிப்மர் மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதச் சம்பளம் ரூ.67,000 வரை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
Embed widget