பாஜகவுடன் முதல்வர் மறைமுக கூட்டணி.. ராகுல் காந்தி பேச்சுக்கு மதுரை எம்பி கடும் விமர்சனம்
பினராயி விஜயன் குறித்து பேசிய ராகுல் காந்தி மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்.

ராகுல் காந்தி பேச்சுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிபிஎம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை கடுமையாக விமர்சித்து பேசினார்.
மோடி, பினராயி மறைமுக கூட்டணி
பிரதமர் நரேந்திர மோடி பினராயி விஜயன் மறைமுகமாக இணைந்து செயல்படுவதாக தெரிவித்த அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவது போல, மோடி பினராயி விஜயனை கட்டுப்படுத்துவதாக குற்றம்சாட்டினார். மேலும், தன் மீதும், பிற மாநில முதலமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அமலாக்கத்துறை ஏன் பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற பெயரை மாற்றி கார்ப்பரேட் பார்ட்டி ஆஃப் இந்தியா என்று ஆக்க வேண்டும் என கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்தார். இதற்கு முன்பாக, ராகுல் காந்தி பக்குவமற்ற அரசியல்வாதி என்று பினராயி விஜயன் விமர்சித்திருந்தார்.
ராகுலுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
இந்த நிலையில், பினராயி விஜனை விமர்சித்த ராகுல் காந்திக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடியின் பிடியில் பினராயி விஜயன் இருக்கிறார் எனச் சொல்கிறார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியால் ஒன்று செய்ய முடியாதவர்களாக கேரள முதல்வரும் அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை எனத் தெரிவித்த அவர், ஊழலற்றவர்களை அதிகாரக் கோழைகளால் எதுவும் செய்துவிட முடியாது என்றும் ஆனால், அதிகாரத்தைப் பிடிக்க எதையும் பேசிவிட முடியும். உங்கள் பேச்சைப் போல என்று விமர்சித்தார்.
மோடியின் பிடியில் பினராயி இருக்கிறார் எனச் சொல்கிறார் திரு. ராகுல் காந்தி.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 8, 2026
மோடியால் ஒன்றும் செய்யமுடியாதவராக பினராயும், கேரள அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
ஊழலற்றவர்களை அதிகாரக் கோழைகளால் எதுவும் செய்துவிட முடியாது.
ஆனால், அதிகாரத்தைப் பிடிக்க எதையும் பேசிவிட… pic.twitter.com/lCo4sP9p18
ட்ரெண்டிங் செய்திகள்






















