கரூர் புத்தகத் திருவிழா 6ம் நாள் நிகழ்ச்சி - சுந்தர ஆவுடையப்பன், கவிஞர் கவிதாசன் சிறப்புரை

ஆறாம் நாள் நிகழ்ச்சியாக இன்று சிந்தனை அரங்கத்தில் சுந்தரஆவுடையப்பன் “தண்டோரா என்ற தலைப்பிலும், சிந்தனை கவிஞர் டாக்டர். கவிதாசன் வெல்வதற்கே வாழ்க்கை“  என்ற  தலைப்பிலும்   சிறப்புரை  ஆற்றினார்கள்.

Continues below advertisement

கரூர் புத்தக திருவிழா – 2022 -  6 ஆம் நாள் நிகழ்ச்சியில் சிந்தனை அரங்கத்தில் சுந்தரஆவுடையப்பன் “தண்டோரா என்ற தலைப்பிலும், சிந்தனை கவிஞர் கவிதாசன் வெல்வதற்கே வாழ்க்கை“ என்ற  தலைப்பிலும்  சிறப்புரை ஆற்றினார்கள். கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைவிடத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் புத்தக திருவிழாவின் 6 ஆம் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில்  இணை இயக்குநர் சுகாதாரத்துறை டாக்டர்.ஞானக்கண் பிரேம் நிவாஸ் தலைமை வகித்தார்கள். கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கம் கே.ராஜேந்திரன், பி.ராமலிங்கம், கே.தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

Continues below advertisement


தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகிணங்க, கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாபெரும் புத்தக திருவிழா - 2022  (19.08.2022  முதல்  29.08..2022  வரை )  நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவினை  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி (19.08.2022) அன்று  திறந்து வைத்து பார்வையிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக ஆறாம் நாள் நிகழ்ச்சியாக இன்று சிந்தனை அரங்கத்தில் சுந்தரஆவுடையப்பன் “தண்டோரா என்ற தலைப்பிலும், சிந்தனை கவிஞர் டாக்டர். கவிதாசன் வெல்வதற்கே வாழ்க்கை“  என்ற  தலைப்பிலும்   சிறப்புரை  ஆற்றினார்கள்.


முன்னதாக புத்தக அரங்கில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளில் குழந்தைகளுக்கான நூல்கள், இலக்கியம், போட்டித்தேர்வுகள், வரலாறு, முற்போக்கு சிந்தனையாளர்களின் நூல்கள், ஆன்மீகம், ஜோதிடம், சமயம் சார்ந்த நூல்கள், மருத்துவம், விளையாட்டு அரசியல் போன்ற நூல்கள் இடம்பெற்று இருக்கின்றன. தொல்லியல் அருங்காட்சியகம், குறும்பட திரையரங்கம், கோளரங்கம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அதிக அளவிலான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டார்கள். மேலும் நாள்தோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்தவகையில் அரசு மேல்நிலைப்பள்ளி - இனுங்கூர்,  புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி – பசுபதிபாளையம்,  வெண்ணெய்மலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெயராமன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


முன்னதாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கே.தட்சிணாமூர்த்தி  வரவேற்றும், நிறைவாக உதவி சுற்றுலாத்துறை அலுவலர் கா.காமில் அன்ஷர்  நன்றி தெரிவித்து  பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் க.புஷ்பாதேவி, மாவட்ட வழங்கல் வலுவலர் தட்சிணாமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் வசுமதி, மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் மாவட்ட புத்தகக் கண்காட்சி குழுவினர் தீபம் சங்கர், சிவக்குமார், தங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola