மேலும் அறிய

காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Singappen Special Task Force : மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு, 2,545 புதிய பணியிடங்களை உருவாக்கி 354 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தொழில் நுட்ப உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கிட ஏதுவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 

மகளிர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு

தமிழகத்தில் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தேர்தலில் தவெக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். இதனையடுத்து  மகளிர் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவுகள் தொடங்குவது தொடர்பாக அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் நேற்று முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

அந்த வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும். மாநிலம் முழுவதும் 70 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகள் தற்போது பணியிலுள்ள 140 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 420 காவலர்களுடன் செயல்படத் தொடங்கும்.
மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு, 2,545 புதிய பணியிடங்களை உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளார். புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களில் 49 காவல் ஆய்வாளர்கள், 2 காவல் ஆய்வாளர்கள் (தொழில்நுட்பம்), 641 காவல் உதவி ஆய்வாளர்கள், 3 காவல் உதவி ஆய்வாளர்கள் (தொழில்நுட்பம்),1,843 காவலர்கள் மற்றும் 7 அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர். இந்தப் படைக்கான காவலர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

 எந்த எந்த இடங்களில் பாதுகாப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் செல்லக்கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில்,

காவல்துறையின் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களைத் தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், அணுகுவதற்குக் கடினமான மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில் திறம்படக் கண்காணிப்பதற்கும், ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினரால் ட்ரோன் ரோந்துப்பணி மேற்கொள்ளப்படும்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்கள்

மேலும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பயன்பாட்டிற்காக,  319 நான்கு  சக்கர வாகனங்களும் 101 இருசக்கர வாகனங்களும் கொள்முதல் செய்யப்படும்.  சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதற்காக,  நிகழ்நேரக் காணொளி ஒளிபரப்புத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்திய உடுப்புகளும் மற்றும் அணுகமுடியாத, கடினமான நிலப்பரப்புகளில் கண்காணிப்பதற்கான ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Drones) உள்ளிட்ட மேம்பட்ட உபகரணங்களும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக  தமிழ்நாடு முதலமைச்சர் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக காவல்துறை தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் செயல்பட இருக்கும் 270 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கள அலகுகளின் பணிகளைக் கண்காணித்து மேற்பார்வையிடுவதற்காக, தலைமையகத்தில் அவருக்கு உதவியாக ஒரு காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள், எட்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் இருபது காவலர்கள் இடம் பெறுவார்கள் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை! ஜிப்மரில் தொடங்கும் ஒரு மாத கால பிரம்மாண்ட பதிவு முகாம்!
ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை! ஜிப்மரில் தொடங்கும் ஒரு மாத கால பிரம்மாண்ட பதிவு முகாம்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
புதுச்சேரி டூ இமயமலை... மதிப்பெண் தேர்வுகளைத் தகர்த்த ஆரோவில் கல்வி முறை: நாடாளுமன்றக் குழுவினர் நேரில் ஆய்வு!
புதுச்சேரி டூ இமயமலை... மதிப்பெண் தேர்வுகளைத் தகர்த்த ஆரோவில் கல்வி முறை: நாடாளுமன்றக் குழுவினர் நேரில் ஆய்வு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Embed widget