சென்னை பெரம்பூரில் நிருபர்களுக்கு நாம் தமிழர் கட்சித்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாடு என்பதை தமிழகம் என கூறுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வது ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டிற்கென தனியான அடையாள அட்டை எதற்காக பயன்படும் என்பதில் தெளிவில்லை.  ஏற்கனவே குடும்ப அட்டைகள் இருக்கும்போது மக்கள் ஐடி என்ற தனி அடையாள அட்டை எதற்கு” என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.