விழுப்புரம்: தெரு தெருவாக சைக்கிளில் பேப்பர் பேட்டவன் தான் சரத்குமார், மக்களால் உயர்த்தப்பட்டு சுப்ரீம் ஸ்டாராக இருக்கேன். என் மகள் திருமணத்திற்கு ரூ.800 கோடி செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள், அது எங்க இருக்கிறது என்று எனக்கு தெரியாது, என்னை இப்போ விட்டா கூட மூட்டை தூக்கி பிழைப்பேன் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து பாஜகவை சார்ந்த நடிகர் சரத்குமார் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் எதிரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாகன பிரச்சார வாகனத்தில் பேசிய நடிகர் சரத்குமார் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்துள்ளார் என்றால், அது நல்லாட்சியை காட்டுகிறது. விக்கிரவாண்டி தொகுதி எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை உள்ளதாகவும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என திமுகவினர் உள்ளனர்.


அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்த தான் காலத்தின் கட்டாயத்தினால் வல்லரசு நாடாக இந்தியா முன்னேற்ற வேண்டும் என்பதால் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தேன். தமிழகத்தில் பலரும் கட்சிகள் நடத்தி வருகிறார்கள் பிறருக்கு துதி பாடும் நிலையில் தான் அவர்கள் உள்ளார்கள். அரசுக்கு தெரியாமல் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து இருக்க முடியாது, தமிழகத்தில் பல இடங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.


மகன் தாயை கொல்கிறான், தந்தை மகனை கொல்கிறான், இந்த நிலையில்தான் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஒரு எம்பி இல்லை என்றாலும் கூட பிரதமர் பல சீரிய திட்டங்களை தமிழகத்திற்கு பலகோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார், மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். "தெரு தெருவாக சைக்கிளில் பேப்பர் பேட்டவன் தான் நான் மக்களால் உயர்த்தப்பட்டவன்" தான் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என தெரிவித்தார்.


சரத்குமார் தனது மகள் திருமணத்திற்கு ரூ.800 கோடி செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள். அது எங்க இருக்கிறது என்று எனக்கு தெரியாது, என்னை இப்போ விட்டா கூட மூட்டை தூக்கி பிழைப்பேன் என்றும் நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளதால் தான் இன்றும் திடமாக உள்ளதாக கூறினார். பகுஜன் சமாஜ் வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். எப்படிபட்ட ஆட்சி நடக்கிறது என்பதை மக்கள் பார்க்க வேண்டும் ஆட்சியும் காட்சியும் மாற வேண்டும் இரு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன.


மக்களுக்காக சேவை செய்யும் வேட்பாளர் தான் பாமக வேட்பாளர் சி. அன்புமணி உள்ளதாகவும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் இரண்டு நாட்களில் அது காணாமல் போய்விடும் என்றும் அதிமுக வாக்காளார்கள் கூட்டணியில் இல்லாவிட்டாலும் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும். இலவசமாக பேருந்து பயணம் என்று கூறிவிட்டு ஓசியில செல்வதாக அமைச்சர் பொன்முடி தெரிவிக்கிறார். இலவச பேருந்து பயணம் என்ற பெயரில் ஏளனம் செய்து கொண்டிருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்தார்.