மேலும் அறிய

புதுச்சேரியில் குடிநீரில் உவர்தன்மை: கேள்விக்குரியான நிலத்தடி நீர்? அச்சத்தில் மக்கள்! அரசு முடிவு என்ன ?

பொதுப்பணித்துறை பராமரிப்பில் குடிநீர் குழாய்களும் கழிவு நீர் குழாய்கள் உள்ளது. இந்த குழாய்களின் எங்கேனும் உடைப்பு அல்லது அடைப்பு ஏற்பட்டதை கண்டால் பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.

புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியில் குடிநீரில் உவர் தன்மை 1000 டி.டி.எஸ்., அளவிற்கு மேல் உள்ள பகுதிகளில் வீட்டிற்கு பொதுப்பணித்துறை சார்பில் 20 லிட்டர் சுத்திகரித்த குடிநீர் வழங்க நடவடிக்கை.

குடிநீரில் உவர் தன்மை அதிகம் - 20 லிட்டர் சுத்திகரித்த குடிநீர் வழங்க நடவடிக்கை

நிலத்தடி நீர் உவர்தன்மையாக மாறியுள்ளது

புதுச்சேரியில் குடிநீர் வினியோகம் நிலத்தடி நீரையே ஆதாரமாக கொண்டுள்ளது. நகர பகுதி குடிநீர் வினியோகத்திற்காக பொதுப்பணித்துறை சார்பில் தினசரி 15 கோடி லிட்டர் நிலத்தடி நீரை எடுத்து, சுத்திகரித்து வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருவதால், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்தன்மையாக மாறியுள்ளது.

மூதாட்டி உட்பட மூவர் உயிரிழப்பு

இந்த குடிநீரை பயன்படுத்துவோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீர் கலங்களாக வந்தது. கடந்த 7ம் தேதி மீண்டும் அதேபகுதியில் பலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், மூதாட்டி உட்பட மூவர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

சீரமைப்பு பணி

பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு தினசரி 20 லிட்டர் சுத்திகரித்த குடிநீர் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை கண்டுபிடிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் துவங்கினர். அரசு விளக்கம் இந்நிலையில், குடிநீரில் கழிவு நீர் கலக்கும் பகுதியை கண்டுபிடித்து சீரமைப்பு பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் சுத்தமான குடிநீர் வினியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து நேற்று விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில்., உருளையன்பேட்டையில், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து, பொதுப்பணித்துறை பொது சுகாதார பிரிவு பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் 60 பேர் கொண்ட 5 குழுவினர், குடிநீர் குழாய்களை ஆய்வு செய்யும் பணியை கடந்த 8 ம் தேதி துவங்கினர். ஒரு வாரம் நடைபெற்று வந்த ஆய்வில், முத்தரையர்பாளையத்தில் இருந்து நகரப் பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் இருந்து பிரிந்து சக்தி நகர் 8 மற்றும் 9வது குறுக்கு வீதிகளுக்கு செல்லும் குழாய், வடிகால் வாய்க்கால் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலப்பதை கடந்த 14ம் தேதி மாலை கண்டுபிடித்தனர்.

குடிநீரில் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் உள்ளனவா என சோதனை

சீரமைப்பு அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக வடிகால் வாய்க்காலுக்கு கீழாக சென்ற குடிநீர் குழாயை, வாய்க்காலுக்கு மேல் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்று 17 ம் தேதிக்குள் முடித்து, குடிநீர் குழாயில் 'வாஷ் அவுட்' கொடுத்த பின் சுத்தமான குடிநீர் வழங்கப்பட உள்ளது. மேலும், பராமரிப்பு பணி முடிவடைந்தாலும், குடிநீரில் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் உள்ளனவா என சோதனை செய்து, தரமான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், குடிநீரில் நோய் பரப்பும் பாக்டீரியாக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக 'குளோரின்' அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 50 சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்கள் தற்போது நகரப் பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் 30 சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்கள் இயங்கி வருகிறது. மேலும், 50 சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் இன்னும் 2 மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வந்ததும், தற்போது 7 நீரேற்று நிலையங்களில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீரில் உவர்தன்மை 1,000 டி.டி.எஸ் அளவிற்கு மேல் உள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தினசரி 20 லிட்டர் சுத்திகரித்த குடிநீர் கேன் இலவசமாக வழங்கப்படும்.

இந்த திட்டம், கடல் நீரை குடிநீராக மாற்றும் நிரந்தர திட்டம் நிறைவேறும் வரை தொடரும். பொதுப்பணித்துறை பராமரிப்பில் 450 கி.மீ., நீளத்திற்கு குடிநீர் குழாய்களும், 400 கி.மீ., நீளத்திற்கு கழிவு நீர் குழாய்கள் உள்ளது. இந்த குழாய்களின் எங்கேனும் உடைப்பு அல்லது அடைப்பு ஏற்பட்டதை கண்டால், உடனடியாக பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அதேபோன்று, குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் குழாய் இணைந்து சென்றால், அந்த பகுதியை கவனமாக பார்க்கவும். குழாய்களில் நீர் கசிவு இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget