மேலும் அறிய

Chennai rowdy murder: அதிகாலையில் பயங்கரம்.!அரசு மருத்துவமனைக்குள் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை- யார் இந்த ஆதி.?

Chennai rowdy murder : சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஒருவர் அதிகாலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தோழியை பார்க்க வந்த ரவுடி

சென்னையில் அதிகாலையில் அரசு மருத்துவமனையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்க்கப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அங்கு பிரசவ வார்டும் உள்ளது. இந்த நிலையில் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஆதி என்ற ஆதிகேசவன் (20). இவரது பெண் தோழியான சுசித்ரா என்பவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்து இறந்துள்ளது. இது தொடர்பாக தகவலை சுசித்ரா தெரிவித்ததையடுத்து மருத்துவமனைக்கு தனது பெண் தோழியை பார்க்க ரவுடி ஆதி வந்துள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் தங்கிய ரவுடி

நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து தனது தோழியை ஆதி பார்த்துள்ளார். அப்போது உடன் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சாருமதி என்பவரையும் அழைத்து வந்தார். தனது தோழிக்கு துணையாக நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் புதிய வார்டு பகுதியில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது ஆதி அசந்து தூங்கிய நிலையில் அதிகாலையில் அடையாளம் தெரியாத 3 பேர் ஹெல்மெட் அணிந்து அங்கு வந்து ரவுடி ஆதியை பட்டாகத்தியால் கொடூரமாக வெட்டி விட்டு தப்பி விட்டனர்.

அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்

இந்த சம்பவத்தை பார்த்த மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளும் பயத்தில் அலறி துடித்தனர். அப்போது வெட்டுப்பட்ட காயத்தால் உயிருக்கு போராடிய ஆதியை அங்கு இருந்தவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் ஆதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஆதியின் உடல் பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சுசித்ரா, சாருமதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியதாக போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

யார் இந்த ஆதி.?

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஆதி என்ற ஆதிகேசவன் (20). இவர் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாவர். கொலை வழக்கு உள்பட 9 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
IPS Officer Transfer : ‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ சென்னையிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
ஒரே சார்ஜில் 521 கிலோமீட்டர் மைலேஜ்.. BYD Atto 3 காரில் இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 521 கிலோமீட்டர் மைலேஜ்.. BYD Atto 3 காரில் இத்தனை வசதிகளா?
DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
Bengaluru Power Cut : பெங்களூருவில் சனிக்கிழமையும் பவர் கட்! எத்தனை மணி நேரம் இருக்காது.. முழு விவரம்
Bengaluru Power Cut : பெங்களூருவில் சனிக்கிழமையும் பவர் கட்! எத்தனை மணி நேரம் இருக்காது.. முழு விவரம்
Embed widget