கத்தியை காட்டி நகை - பணம் பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையர் கடற்கரைக்கு, கடந்த 2022 - ம் ஆண்டு மார்ச் மாதம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார்.

Continues below advertisement

அப்போது இருவரும் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி மாணவியிடமிருந்த நகை, பணம் மற்றும் செல்போன்களை பறித்துள்ளனர்.

கூட்டு பாலியல் பலாத்காரம்

பெண்ணின் துப்பட்டாவால் ஹரிகிருஷ்ணனை கட்டிப் போட்டு அவரது கண் முன்னாலேயே மாணவியை அரிவாளால் தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற காதல் ஜோடி நடந்த கொடூர சம்பவத்தால் மனவேதனை அடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Continues below advertisement

ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் நடந்த சம்பவம் குறித்து அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் கண்ட போலீசார்

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவம் நடைபெற்ற மூக்கையூர் கடற்கரை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சம்பவ நேரத்தில் வந்து சென்ற மூன்று வாலிபர்களை அடையாளம் கண்டனர்.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், பத்மஸ்வரன், தினேஷ்குமார் மற்றும் அஜித்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார், மாணவியிடம் பறிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை பத்மஸ்வரன் தனது தாய் வில்லம்மாளிடம் கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பத்மஸ்வரனின் தாய் வில்லம்மாளையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்