Just In





மக்களே உஷார்! புதுச்சேரியில் வெளுக்க போகும் மழை
Puducherry Rain : புதுச்சேரியில் நகர மற்றும் கிராம பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

புதுச்சேரி: புதுச்சேரியில் நகர மற்றும் கிராம பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது, இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
புதுச்சேரியில் கடந்த ஒருவாரமாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் அதிகாலை முதலே புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மிதமான மழை பெய்தது வருகிறது குறிப்பாக கடற்கரை சாலை, உப்பளம், முத்தியால்பேட்டை, புதிய பேருந்து நிலையம் , காமராஜ் நகர் உள்ளிட்ட நகரப் பகுதியிலும் தவளக்குப்பம், அரியாங்குப்பம், நல்லவாடு, பாகூர், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டஙளில் காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை என்ன?
வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அநேக இடங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் என்னென்ன ?
ஒரு சில மாவட்டங்களுக்கு இன்று அதிக மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலட் விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலட் விடப்பட்டுள்ளது.
விருதுநகர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை வானிலை நிலவரம் என்ன?
கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நாளையும் கனமழை பெயர் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.