திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தடைந்தார். குமரிக்கு வந்த ஜனாதிபதி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். 


கேரளாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வந்துள்ள ஜனாதிபதி, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தொடர்ந்து பகவதி அம்மன் கோயிலுக்கும் செல்கிறார். 


ஜனாதிபதி வருகையை ஒட்டி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் லட்சத்தீவிற்கு செல்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.