நாளை மின் தடை: திருப்பூர், கரூர், தருமபுரி, தேனி, நாமக்கல் பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கா?
மின் வினியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் வினியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். அந்த வகையில் நாளைய தினம் (19.02.2026) வியாழக்கிழமை அன்று வழக்கமான மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ளுமாறு மின் வாரியம் தரப்பு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மின் தடை பகுதிகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் எம்.என்.பாளையம், வாழைக்கொம்பு நாகூர், சுபியாகவுண்டன் புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்து புதூர், பரியோத்து, தீவன்ஷா புதூர், கனபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன் புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடாச காலனி ஆகிய இடங்கள்.
கரூர் மாவட்டத்தில் வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம் ஆகிய இடங்கள்.தருமபுரி மாவட்டத்தில் மொரப்பூர், கல்லூர், கேத்தனூர், எலவாடை, சென்னம்பட்டி, மரித்திப்பட்டி புதூர், பனமரத்துப்பட்டி, மூங்கேல்பட்டி, மூட்டூர் ஆகிய இடங்கள்.
தேனி மாவட்டத்தில் கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன்கோவில், ஊத்துகாடு, டவுன் ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, ஏத்தாகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
நாமக்கல் மாவட்டத்தில் காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம், வில்லிப்பாளையம், ஜங்கமாநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியகவுண்டம்பாளையம், தம்மகாளிபாளையம், பில்லூர், கூடாச்சேரி, அர்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கடை, கஜேந்திரநகர், சுண்டக்காபாளையம் ஆகிய இடங்கள்.
மின் தடை நேரங்களில் செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும்
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.























