Rain Alert: கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!
தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை
நேற்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக தென் மாவட்டங்கள், மன்னார் வளைகுடா வழியாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை பெய்யும் மாவட்டங்கள்
குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்ப நிலை குறித்த எச்சரிக்கை
மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் இன்று முதல் மே 29-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். மேலும், அதிகபட்ச வெப்பநிலையானது 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















