விழுப்புரம்: தேர்தலில் கூட்டணி குறித்து அறிவிக்கும் அதிகாரம் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே உள்ளதாகவும், மருத்துவர் ராமதாஸ் யாருடன் கூட்டணி வைக்கிறார்களோ அவர்கள் தான் 2026 ஆல் வெற்றி பெறுவார்கள் என சேலம் பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராமதாசை சந்தித்தபின் பேட்டியளித்த அக்கட்சியின் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மகளிர் மாநாடு பூம்புகாரில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறுவதால் மாநாட்டிற்கான முக்கியத்துவம் குறித்தும் அதிகளவு பெண்களை அழைத்து வர வேண்டுமென மருத்துவர் ராமதாஸ் சந்தித்து பேசியதில் வலியுறுத்தியதாகவும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் விரும்புகிற நல்ல கூட்டணி இருக்கும் என்றும் தேர்தலில் கூட்டணி குறித்து அறிவிக்கும் அதிகாரம் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்தார்.

ஊடகப்பேரவையில் அட்டக்கத்தி சிலர் இல்லாத பொல்லாததை தெரிவிக்கிறார்கள், மருத்துவர் அய்யா வாழ்க என குறிப்பிட்டாலே திட்டும் கூட்டம் ஒன்று உள்ளதாகவும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அருள் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாசும், மருத்துவர் ராமதாசும் இணையவில்லை என்றால் தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமே செய்வேன் என்ற போது மக்கள் வாக்களித்துள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய கூடாது, ஐந்து ஆண்டுகள் முழுமையாக மக்கள் பணி செய்ய வேண்டுமென மருத்துவர் ராமதாஸ் கூறியதாகவும் அன்புமணிக்கு கட்டாயம் பூம்புகார் மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்படும் பாமகவின் எதிர்காலம் அவர்தான் என்றும் மருத்துவர் ராமதாஸ் யாருடன் கூட்டணி வைக்கிறாரோ அவர்கள் தான் 2026ல் தமிழகத்தில் ஆட்சியமைப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். அய்யா எடுப்பது தான் முடிவு, வயதானவர்கள் கூட துள்ளி துள்ளி குதித்து மகிழ்ச்சி அடையும் அளவுக்கு கூட்டணி அறிவிப்பு இருக்கும்.

Continues below advertisement

மருத்துவர் அய்யா மீது அளப்பறிய அன்பு கொண்டவர் தான் செல்வபெருந்தகை சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து சட்டப்பேரவைவில் பேசும் போது தங்களுக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் ஆதரவாக பேச கூடியவர் அதனால் மருத்துவர் ராமதாசை செல்வபெருந்தகை சந்தித்ததாக அருள் தெரிவித்தார்.