வெர்டிகல் லிஃப்ட் வசதி கொண்ட நாட்டின் முதல் கடல் பாலமான ராமேஷ்வரம் புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அதோடு, ராமேஷ்வரம் - தாம்பரம் வரையிலான புதிய ரயில் சேவையையும் தொடங்கி வைத்திருக்கிறார். 

ராமநவமியை முன்னிட்டு பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். ராமேஸ்வரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட புதிய தினசரி ரயில் சேவையையும் தொடங்கி வைத்துள்ளார். 

புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள்: 

இந்தப் பாலம் ராமேஸ்வரம் தீவுடன் இந்திய நாட்டின் பிரதான நிலப்பகுதியை இணைக்கிறது. கடலோர உள்கட்டமைப்பில் இணைப்பு மற்றும் புதுமையின் நவீன அடையாளமாக திகழ்கிறது.

ரூ.550 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த 2.08 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம்,  அதிநவீன 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த லிப்ட் பொறிமுறையானது 17 மீட்டர் வரை உயர அனுமதிக்கிறது.

இது துருப்பிடிக்காத எஃகு கலவைகள், அரிப்பை எதிர்க்கும் பாலிசிலோக்சேன் பெயிண்ட் மற்றும் முழுமையாக பற்றவைக்கப்பட்ட மூட்டுகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த பாலம் நீண்ட கால ஆயுள் மற்றும் குறைந்தபட்ச பராமரிப்பை உறுதி செய்கிறது.

 

கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரமும், 333 கான்கீரிட் அடித்தளம், 101 தூண்கள், 99 இடைவெளி இணைப்புகள், 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட், இது 17 மீட்டர் உயரம் வரை உயரும் வகையில் நடுப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையில் இருந்து விமானம் மூலம் ராமேஷ்வரம் வரும்போது, தான் ராமர் பாலத்தை பார்த்ததாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், "சிறிது நேரத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

தெய்வீக தற்செயலாக, அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் இது நடந்தது. இருவரின் தரிசனத்தையும் பெற்ற பாக்கியம். பிரபு ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி. அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும்" என பதிவிட்டுள்ளார்.