Petrol Diesel Price Hike: விலைவாசி எல்லாம் எகிறப்போது... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் வேதனை
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே நடந்து வரும் போர் மொத்த உலகத்தின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக எதிரொலித்து வருகிறது.
அமெரிக்கா - ஈரான் போர்:
கச்சா எண்ணெய்யை கொண்டு வரும் ஹார்மூஸ் நீரிணை வழித்தடம் இந்த போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்குள் கச்சா எண்ணெய்யை கொண்டு வருவதே சவாலாக மாறியுள்ளது. இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வணிக சிலிண்டரின் விலையை ஒரே நாளில் ரூபாய் 1000 வரை உயர்த்தியது. இதனால், சிலிண்டர் விலை ரூபாய் 3 ஆயிரத்து 300 ஆக உயர்ந்தது.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு:
இந்த சூழலில், பெட்ரோல் மற்றும் டீசலை லிட்டருக்கு ரூபாய் 3ம், சிஎன்ஜி-யை கிலோவிற்கு ரூபாய் 2ம் உயர்த்தியுள்ளனர். இது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை மிக மிக குறைவாக இருந்த போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அப்போது தொடர்ச்சியாக உயர்த்தி வந்தது. தற்போது நெருக்கடியான சூழலில் மீண்டும் உயர்த்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த செயலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் சூழல் உண்டாகியுள்ளது. ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்தபோது டீக்கடைகள், உணவகங்களில் தேநீர், உணவுப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. வணிக சிலிண்டர் விலை உயர்ந்தபோது தங்கும் விடுதிகளின் வாடகை உயர்த்தப்பட்டது. தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சரக்குப் போக்குவரத்தில் இதன் தாக்கம் எதிரொலிக்க உள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்:
தொலைதூரங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் வாடகைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்களின் விலையும் உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த சூழல் எப்போது சரியாகும்? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிலைமை சீரானால் விலைவாசி கட்டுக்குள் வருமா? என்ற கேள்வியும் உருவாகியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் அமெரிக்க டாலர் மதிப்பும் சரிந்து வருகிறது. இது பங்குச்சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.
தங்கத்தின் விலையும் கட்டுக்கடங்காமல் சென்றுள்ள சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தங்கம் வாங்க வேண்டாம், பெட்ரோல் டீசலை சேமிக்கும் பொருட்டு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள் என்று பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















