வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் கொடுத்த புகாரில்,  நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் எம்பி ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் கொடுத்ததாக  தொடரப்பட்ட வழக்கு கடந்த 7ஆம் தேதி தேனி சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் அவரது மகன் ரவீந்திரநாத் மீது தேனி குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையை வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டது. மேலும், வழக்கு தொடர்ந்த மிலானி என்பவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.




இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இபிகோ 156 (3) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண