30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல IT நிறுவனம் !! அதிர்ச்சி தகவல்
உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களை ஆரக்கிள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 12,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

செலவீனங்களை கட்டுப்படுத்த ஊழியர்கள் பணி நீக்கம்
12,000 பேர் பணி நீக்கம்
இந்தியா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஆட் குறைப்பு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இணையத்தில் பரவி வரும் தகவல்களின் படி, இந்தியாவில் உள்ள சுமார் 30,000 பணியாளர்களில் கிட்டத்தட்ட 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
உலகளவில், பணிநீக்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இது ஆரக்கிள் நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் ஏறத்தாழ 18% ஆகும். இருப்பினும், நிறுவனம் இதன் அளவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பிளைண்ட், ரெட்டிட் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடகத் தளங்களில் நிலவும் பேச்சுகள், பரவலான வேலை இழப்புகளைச் சுட்டிக் காட்டுகின்றன.
சமூக வலைத் தளங்களில் ஊழியர்கள் பதிவு
இது குறித்து ஆரக்கிள் நிறுவனம், அதிகாலை 6 மணிக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பலரும் ரெட்டிட் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களில் பலரும், இது குறித்து மனிதவளத் துறை அலுவலரோ அல்லது மேலாளரோ தங்களிடம் எந்தவித கலந்துரையாடல்களையும் நடத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பணி நீக்கம் குறித்து ஆரக்கிள் தரப்பில் கூறுகையில்
ட்ரெண்டிங் செய்திகள்






















