இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய சலுகை: Rail One ஆப்பில் டிக்கெட் பதிவு செய்தால் தள்ளுபடி!
யில் ஒன் மூலம் பொதுச் சீட்டுகளை பதிவு செய்பவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி ஜூலை 14 வரை வழங்கப்படும். ரூ.50 டிக்கெட்டுக்கு ரூ.47 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட், தட்கல், நடைமேடை சீட்டு, சீசன் பாஸ் உள்ளிட்ட வசதிகள் பயன்படுத்தலாம். மேலும் ரயிலின் நேரடி நிலை, PNR தகவல், கோச் அமைப்பு, தாமத விவரங்கள் மற்றும் உணவு ஆர்டர் போன்ற சேவைகளும் இதில் உள்ளன. இந்திய ரயில்வே சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் மத்திய அரசு ‘ரயில் ஒன்’ என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய இந்த டிஜிட்டல் முயற்சி, முன்பு தனித்தனியாக இருந்த பல ரயில்வே செயலிகளை ஒரே அமைப்பில் இணைக்கிறது.
டிக்கெட் பதிவு முதல் புகார் அளித்தல் வரை அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் கிடைக்கும் இந்த ஆப் மூலம் முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட், தட்கல், நடைமேடை சீட்டு, சீசன் பாஸ் உள்ளிட்ட வசதிகள் பயன்படுத்தலாம். மேலும் ரயிலின் நேரடி நிலை, PNR தகவல், கோச் அமைப்பு, தாமத விவரங்கள் மற்றும் உணவு ஆர்டர் போன்ற சேவைகளும் இதில் உள்ளன. IRCTC, UTS போன்ற தனி செயலிகளின் அம்சங்கள் அனைத்தும் இப்போது ஒரே தளத்தில் கிடைப்பதால் பயணிகளுக்கு எளிமை அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் கட்டணத்தை ஊக்குவிக்கும் வகையில் R Wallet வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், இதுவரை 2.57 கோடி பயணிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் பயன்பாட்டை அதிகரிக்க முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ஒன் மூலம் பொதுச் சீட்டுகளை பதிவு செய்பவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி ஜூலை 14 வரை வழங்கப்படும். ரூ.50 டிக்கெட்டுக்கு ரூ.47 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். தினசரி பயணிகளுக்கு இது பயனளிக்கும் திட்டமாக கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















