மேலும் அறிய

New Low Pressure Area: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க

New Low Pressure Area: வரும் 21-ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில், வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

கடந்த சில வாரங்களுக்கு முன் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. அளவிற்கு மழை பெய்தது. இது, கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்ச மழையாகும். ஆனால், நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஒரே நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கனமழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வானிலை ஆய்வாளர் கூறியுள்ளது என்ன.?

இதனிடையே, அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதில் ஒன்று புயலாக உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக, டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது வரை நவம்பர் மாதத்தில் மழை இயல்பை விட குறைவாக பதிவாகியிருந்தாலும், இனி வரும் நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்றும், அதனால், இயல்பை விட அதிக மழை பதிவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று முன்தினம் முதல் வடகிழக்கு பருவகாற்று தமிழ்நாட்டில் வீசத் தொடங்கியுள்ளதால், மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நாளை மறுநாள் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் எனவும், அதனால், வரும் 16-ம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு, 17, 18 தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்பு

இதைத் தொடர்ந்து 19-ம் தேதி உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் எனவும், இந்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, லட்சத்தீவு நோக்கி செல்லும் என கணிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதன்பின்னர், 21 முதல் 25-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழையை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

புயலாக மாற வாய்ப்பு

தமிழ்நாட்டில் 25-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என்றும், மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ள ஹேமசந்தர், அதனைத் தொடர்ந்து, தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget