கரூர் மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் கூடுகிறது என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு வரும் மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய சட்டப் பணிகள் மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு படி வரும் 12ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் கரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு குளித்தலை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடமோ வழிக்காட்டிகள் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.





மேலும், கிருஷ்ணராயபுரம் உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் மன்றம், அகில நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ள வழக்குகள் நீதிமன்றங்களிலோ கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு குழுவிடமோ தெரிவித்து பயன் பெறலாம். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கி கடன், நிதி நிறுவன கடன்களும், ஏனைய பிரச்னைகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும்.


 


 



 


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து தவிர, இதர மன வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி கடன் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு மற்றும் நுகர்வோர் வழக்கு உட்பட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், வரும் 11ம் தேதி வரை பணியில் உள்ள நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அந்த நீதிமன்ற அமர்வு கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரை இயங்கும். எனவே, வழக்குகள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால் 04324 296570 என்ற கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.