கரூரில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேட்டி.


 




 


மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரை மூலம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்து வருகிறார் என தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துராமன் என்பவரிடம் ஒன்றரை கோடி ரூபாயும், மதுரை சேர்ந்த ஒருவர் ரூ. 75 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக அதற்கான ஆடியோ வெளியாகி உள்ளது.


 




தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் பாதையாத்திரை சென்றுள்ளனர். ஆனால் அண்ணாமலை போல பெயருக்காக தினசரி ஒரு கிலோமீட்டர், அரை கிலோ மீட்டர் நடந்து விட்டு  பாதயாத்திரை என கூறி  கோடிக் கணக்கில் வசூல் செய்து வருகிறார். பாதயாத்திரை என்ற பெயரில் அண்ணாமலை கொள்ளையடித்து வருகிறார். யாத்திரை என்ற பெயரில் சிறு குழு தொழில் அதிபர்களிடம் மிரட்டி பணம் பறித்து வருகிறார்.


 




 


அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பதவியில் இருக்கும் பொழுது ஊழலில் ஈடுபட்டவர். அதே வேலையை தற்போது அரசியலிலும் செய்து வருகிறார். பாதயாத்திரை செல்லும் அண்ணாமலை எதற்கு திடீரென்று பாதியில் நிறுத்தி விட்டு வெளிநாடு செல்கிறார். மிகப்பெரிய தொகை வெளிநாடுகளில் வசூல் செய்வதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வசூல் கொள்ளை குற்றச்சாட்டில் அண்ணாமலைக்கு தொடர்பு உள்ளது என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்” என்றார்.