நாமக்கல் குருசாமிபாளையம் தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுபோக்கு, வயிற்று வலி ஏற்பட்டதால் பிள்ளாநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.