Minister N Anand: "கட்சியில் இணையும் புதியவர்கள்.. பயத்தில் தவெகவினர்! - ட்விஸ்ட் கொடுத்த அமைச்சர் ஆனந்த்
புதிதாக தவெகவில் சேருபவர்களை பார்த்து கட்சியினர் பயப்பட வேண்டாம். உங்களுக்கும் மரியாதை, பதவி கிடைக்கும் - ஆனந்த்

புதிதாக கட்சியில் சேருபவர்களை நினைத்து தவெகவினர் தயங்க வேண்டாம். தவெகவில் அனைத்து நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை, பதவி கிடைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர். அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகி கமலக்கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் சேர்ந்தனர். அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி, அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு நிர்வாகிகளும் அக்கட்சியில் இணைந்தனர்.
லஞ்சம் வாங்கினால் பதவியில் இருக்கமாட்டோம்
பனையூரில் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அக்கட்சியில் பொதுச்செயலாளர் ஆனந்த் கட்சியினர் மத்தியில் பேசினார். அதில், ”நாங்கள் செலவு செய்து ஜெயிக்கவில்லை; 234 தொகுதிகளிலும் முழுக்க முழுக்க முதல்வர் விஜயின் முகத்தை மட்டும் காட்டி வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை; அப்படி செய்தால் அடுத்த வினாடியே எங்கள் பதவியில் இருக்க மாட்டோம்; முதல்வர் உடனே நடவடிக்கை எடுத்துவிடுவார்” என்று கூறினார்.
தவெகவினர் பயப்பட வேண்டாம்
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நான் பேச நினைத்தை எல்லாம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிவிட்டார். புதிதாக கட்சியில் சேருபவர்களை நினைத்து தவெகவினர் தயங்க வேண்டாம். தவெகவில் அனைத்து நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை, பதவி கிடைக்கும். அமைச்சர் செங்கோட்டையன் தவெகவுக்கு வந்தபிறகு அவருக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டது. உள்ளாட்சித் துறை தேர்தல் வருகிறது. அதில் அனைத்திலும் வெற்றி பெறுவோம். தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல் ஏக்கள் தங்கள் தொகுதி மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தினால் உடனடியாக சரிசெய்து கொடுப்போம்” என்று தெரிவித்தார்.
Before You Go
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















