Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (08.01.2026) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல்வேறு இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

Continues below advertisement

நீடூர் துணை மின் நிலைய பராமரிப்பு பணி

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டத்திற்கு உட்பட்ட நீடூர், துணை மின் நிலையங்களில் 08.01.2026 நாளைய தினம் வியாழக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மயிலாடுதுறை நகர் உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் 

நீடூர் துணை மின் நிலையம்

* நீடூர்

* மல்லியக்கொல்லை 

* வில்லியநல்லூர்

* கொண்டல் 

* பாலக்குடி

* தாழஞ்சேரி

* கொற்கை

* அருண்மொழிதேவன்

* கங்கணம்புத்தூர்

* மேலாநல்லூர்

* நடராஜபுரம் 

* கீழமருதாந்தநல்லூர்

* மேலமருதாந்தநல்லூர் 

* பொன்மாசநல்லூர்

* மணலூர்

* மாப்படுகை

* ஆனந்தகுடி 

* சோழம்பேட்டை ஆகிய ஊர்கள்

மேற்குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஓர் அறிவுறுத்தல்

பொதுவாக, பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 3 மணிக்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும். எனினும், மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து இந்த மின் நிறுத்தம் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஆகவே, மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த தற்காலிக மின்தடையால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

வழக்கமாக காலை 9 மணிக்கு மின் நிறுத்தம் நடைபெறும் நிலையில் இந்த முறை முதல் முறையாக காலை 8 மணிக்கே மின்நிறுத்தம் செய்யப்படுவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.