வட தமிழகத்தில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ("மாண்டஸ்" புயலின்) கடந்த 6 மணி நேரத்தில் 9 கிமீ வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் கிட்டத்தட்ட மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நேரத்தில் வட தமிழகத்தின் மீது மையம் கொண்டிருந்தது.  


வேலூருக்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 40கிமீ மற்றும் கிருஷ்ணகிரிக்கு கிழக்கு-வடகிழக்கே 140கிமீ தொலைவில் உள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.