கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்பது, நேரலையில் காண்பது பற்றி காணலாம்.
மகா சிவராத்திரி 2025:
நாளை (பிப்ரவரி -26) புதன்கிழமை மகா சிவராத்திரி நாள். இந்த நாளில் ஈசனை முழு மனதோடு வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. மகாசிவராத்திரி நாளில் சிவாலயங்களில் இரவில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பது பல நன்மைகளை வழங்கும் என்று நம்பப்படுகிறது.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒன்றுதான் மகா சிவராத்திரி. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பான நாளாக அமையும். மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கோவை ஈஷா மகா சிவராத்திரி
கோவையில் உள்ள ஈஷா மகா சிவராத்திரி நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பிரபலமானதாகிவிட்டது. கோயம்புத்தூர் அருகில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையம், உள்நிலை பரிமாற்றத்தையும் நல்வாழ்வையும் நாடி வருபவர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த இடமாக விளங்குவதாக அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு ஏராளமான பக்தர்களுடன் யோகா உடன் கூடிய வழிபாடாக, மகா சிவராத்திரி கொண்டாடப்படும். இது சமீப ஆண்டுகளில் மிகவும் பிரசித்திப்பெற்றது.
மகா சிவராத்திரி நிகழ்ச்சி:
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஹாஸ்ட் செய்யும் மகா சிவராத்திரி நிகழ்ச்சி, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி அன்று வரும் 26 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் 27-ம் தேதி காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
மகா சிவராத்திரி பூஜைகள்:
சிவராத்திரியன்று அனைவரும் கலந்து கொண்டு தியானம் நடைபெறும். பஞ்சபூத ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கும். லிங்க பைரவி தேவி மகா யாத்திரை, தியானம், சத்குருவின் சத்சங்கம் அதோடு மக்கள் பக்தியுணர்வுடன் எதிர்பார்க்கும் ஆதியோகியின் தரிசனம் ஆகியவைகள் நடைபெற உள்ளது. இதோடு பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
ஆதியோகியாக அறியப்பட்டு, ஆதிகுருவாக அமர்ந்து யோக அறிவியலை நாம் உணரும் வகையில் இந்நிகழ்வு இருக்கும் என்று அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பக்தியுடன் நேரில் பங்கேற்று ஆதியோகி சிவனின் அருளை பெறலாம். இந்நிகழ்வை பொதுமக்கள் வீட்டிலிருந்தும் காணலாம். நேரலையிலும் ஒளிப்பரப்படும். ஈஷா நிறுவனத்தின் இணையதளத்திலும் நிகழ்ச்சியின் நேரலைக்கான லிங்க் வழங்கப்பட்டிருக்கும். Zee 5 ஜியோ ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்படுகிறது.
ஆதியோகியின் அருள் பெறும் வகையில், சக்தியான ருத்ராட்சங்கள் வழங்கப்படும். பொதுமக்களுக்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். இந்த ருத்ராட்ச பிரசாதங்களை பெறுவதற்கு 83000 83000 என்ற தொடர்பு எண்ணை அழைக்கலாம். இந்த எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்தால் போதும். ஆதியோகியின் அருளுடன் ருத்ராட்சம், விபூதி பிரசாதம், ஆதியோகி பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
சத்குரு அவர்களால் மகாசிவராத்திரி தினத்தில் விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் ருத்ராட்சம், கட்டணம் இல்லாமல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிவனின் அருளை இல்லத்திற்கு வரவழைக்க, பிரதிஷ்டை செய்யப்பட்ட ருத்ராட்சத்தை பெற https://isha.sadhguru.org/en/rudraksha-diksha - என்ற இணைப்பை க்ளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க பதிவு செய்வது எப்படி ?
ஆதியோகியின் அருளுடன் சிவராத்தியை கொண்டாட, சிவனை வழிபட ஈசா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கெற்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி டிக்கெட் புக் செய்யலாம். இதில் உங்களுடைய பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து, கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட் புக் செய்யலாம்.
https://portal-online.sadhguru.org/event/6113/register - என்ற இணைப்பை க்ளிக் செய்து டிக்கெட் புக் செய்யலாம்.
நிகழ்ச்சி நடைபெறும் நேரம்:
பிப்ரவரி 26, மாலை 6 மணி முதல் பிப்ரவரி 27 காலை 6 மணி வரை - (இந்திய நேரப்படி, சத்குருவுடன் மகா சிவராத்திரி )
தொலைக்காட்சியில் காண - https://isha.sadhguru.org/mahashivratri/participate/tv-channels/
ஈஷா சார்பில் நேரலை காண - யூடியூப் நேரலையில்... - https://youtu.be/v-ftGpI-rr8
மேலும் வாசிக்க..
ஈஷாவில் 26ம் தேதி மகாசிவராத்திரி கொண்டாட்டம்; கோவைக்கு வரும் அமித்ஷா, டிகே சிவகுமார்