சத்தியமங்கம் வனப்பகுதியில் விலங்குகளின் பாதுகாப்பு கருதி இரவு நேரத்தில் கனரக வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று வந்தபோது, சத்தியமங்கலம் வனப்பகுதியில் விதிக்கப்பட்ட இரவு நேர போக்குவரத்து தடைக்கான உத்தரவை திரும்ப பெற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.