ஏன் இப்படி அடாவடி பண்றீங்க? - டாஸ்மாக் கடைக்கு டாட்டா! - நீதிமன்ற உத்தரவால் தமிழக அரசு ஷாக்!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்.

Continues below advertisement

மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Continues below advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் தனது கிராமத்தில் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்பனை செய்ததாக தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் அதை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில் “டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட கடையை குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தேன். அதனால் என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் குத்தகை முடிந்த பிறகும் கடைகளை காலி செய்யாமல் எத்தனை கடைகள் நடத்தப்படுகிறது என்ற அறிக்கையுடன் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நேரில் ஆஜராகினார். அப்போது குறிப்பிட்ட கடையை மூன்று நாட்களுக்கு முன் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து 2019ஆம் ஆண்டு குத்தகை முடிந்தும் கடையை காலி செய்யாதது ஏன்? இதை கேள்வி கேட்டால் போலீஸை வைத்து வழக்கு போடுவீங்களா? ஏன் இப்படி அடாவடி செய்கிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். 

மக்களுக்கு எதிராக செயல்படுவதோடு சொந்த வருமானத்தை மட்டுமே டாஸ்மாக் நிர்வாகம் பார்க்கிறது. இதுபோல் மீண்டும் புகார் வந்தால் நீதிமன்றம் தீவிரமாக கருதும். கடை வேண்டாம் என மக்கள் கூறினால் போலீசாரை வைத்து கடைகளை நடத்துவீர்களா? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், தனிநபர்களுக்கு சட்டம் இல்லையா? சட்டத்தை அரசு கையில் எடுக்கக்கூடாது எனவும் வினவினார். 

குத்தகை காலம் முடிந்தால் கடையை காலி செய்ய வேண்டும் எனவும், டாஸ்மாக் கடை வேண்டாம் என மக்கள் கூறினால் கடையை மாற்ற வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் சுந்தருக்கு எதிரான வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola