சென்னை மக்கள் எதிர்பார்த்த நியூஸ்.! மத்திய கைலாஷ் சாலையில் 60 கோடியில் L வடிவ மேம்பாலம்- திறப்பு விழா எப்போது.?
Madhya Kailash L shaped flyover: சென்னையில் அதிக ஐடி நிறுவனங்கள் உள்ள இடமான மத்திய கைலாஷ் பகுதியில் தினமும் வாகன நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள L வடிவ இரு வழித்தட சாலை மேம்பாலம் திறக்கப்படவுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் பல்வேறு இடங்களில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலையில் பள்ளிகளுக்கு செல்வதற்கும், அலுவலகம் செல்வதற்கும் பல மணி நேரம் வாகன நெரிசலில் சிக்கி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேம்பாலங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐடி நிறுவனங்கள் அதிகமாக உள்ள இடமாக மைத்தியகைலாஷ், தரமனி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்கள் உள்ளது.
மத்தியகைலாஷ்- ஒரு மணி நேரத்தில் 11,000 வாகனங்கள்
இதில் முக்கிய இடமாக இருப்பது மத்திய கைலாஷ் பகுதியாகும். இந்த சந்திப்பில், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11,000 வாகனங்கள் கடந்து செல்லும் மிகப்பரபரப்பான இடமாகும். எனவே இந்த சாலைப்பகுதியில் L வடிவ இரு வழித்தட சாலை மேம்பாலம் அமைக்கும் பணியானது திட்டமிடப்பட்டது. இதற்காக பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. குறிப்பாக சர்தார் படேல் சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை (OMR) ஆகியவற்றை இணைக்கும் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணியில், மத்திய கிர்டர் (Central Girder) அமைப்பதிலும், அணுகுசாலை அமைப்பதிலும் நீடித்த சிக்கல்கள் இருந்தன. இதன் காரணமாக பல மாதங்களாக பணிகள் தாமதமடைந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை தற்போது அந்தத் தடைகளை வெற்றிகரமாகச் முடித்துள்ளது.
பிப்ரவரி 16ஆம் தேதி 'L' வடிவ பாலம் தொடக்கம்
அந்த வகையில் இந்த சாலையில் கிண்டியிலிருந்து ஓ.எம்.ஆர் நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், அவற்றின் பயண நேரத்தைக் குறைக்கும் விதமாகவே இந்த 'L' வடிவ பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 60 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 16ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதனால் அடையாறு, கிண்டி மற்றும் ஓ.எம்.ஆர் பகுதிகளில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு இது மிகப்பெரிய நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.























