ரேஷன் கடைகள்- மானிய விலையில் உணவு

தமிழகம் முழுவதும்  34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகளில் இலவசம் மற்றும் மானிய விலையில்  2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டுகளில் மின்னனு ரேஷன் கார்டு அறிமுகமானதற்கு பிறகு, குடும்பத் தலைவர் கைரேகை பதிவு செய்து பொருட்களை வாங்கி வந்தனர். இதனையடுத்து ரேஷன் கார்டுகளில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் உண்மையான மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

ரேஷன் கார்டுகளில் போலியான நபர்கள்

அந்த வகையில் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவர் மட்டுமில்லாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ரேஷன் கார்டில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என கூட்டுறவுத் துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் போலியான நபர்களை கண்டறியும் வகையில் கைரேகை பதிவு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சில மாவட்டங்களில் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது. மேலும் விரல் ரேகை இல்லாததும் தொடர்ந்து சிலர் பயன்பெற்று வருகின்றனர். இதை தடுக்க ஆதார் எண் இணைக்கவும், விரல்ரேகையை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தேசிய உணவுப் பாதுவாப்புச் சட்டம் 200ன் படி முன்னுரிமை PHH மற்றும் அந்தியோதயா அன்னயோஜனாAAY குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள அணைத்து sedut(KYC) 100% நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அனைத்து மண்டலங்களிலிருந்தும் பெறப்பட்ட இறந்த நபர்களின் பட்டியலில் (death list) உள்ள பெயரினை பொதுவிநியோகத்திட்ட தரவுத் தொகுப்பிலிருந்து நீக்கம் செய்யுமாறு உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகரியோர் பாதுகாப்புத்துறை கேட்டுக்கொள்ளப்பட்டது.

Continues below advertisement

ரேஷன் கார்டுகளில் ஆதார் கட்டாயம்

மேலும் நேர்முகக் கடிதத்தில் OASYS திட்ட ஒருங்கிணைப்பாளரால் இறந்த நபர்களின் பட்டியலில் (death list) பின்வரும் குறைபாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சில மாவட்டங்களில், குடும்ப அட்டை எண் மற்றும் இறந்த நபரின் பெயர் இடம்பெறவில்லை எனவும் இருந்த நபரின் பெயரானது ஆங்கிலத்தில் முழுமையாக பதிவு செய்யப்படாமல் சில இடங்களில் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆதார் எண்விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் பெயர் நீக்கம்

எனவே இறந்த நபரின் ஆதார் எண்ணினை அனைத்து மண்டலங்களிலிருந்தும் பெற்று அவ்விவரத்தினை அனுப்பி வைக்கும் நேர்வில் மட்டுமே. இறந்த நபரின் பெயரினை பொது விநியோகத்திட்ட தரவுத் தொகுப்பிலிருந்து நீக்கம் செய்ய இயலும் எனவும், இறந்த நபரின் பெயரினை பொது விநியோகத்திட்ட தரவுத் தொகுப்பில் உள்ளவாறு ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே PHHமற்றும் AAY குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளிகளின் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) 100% நிறைவேற்றுவதற்கு இறந்த நபர்களின் விவரங்களை சரியான ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட படிவத்தில் (ஆங்கிலத்தில் மட்டும்) பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.